என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewellery flush"
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவர் பெரியதோட்டம் என்ற பகுதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். அங்கு மகன் குடும்பத்தினருடன் பேசி விட்டு இரவு பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
நல்லூத்துபாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருட்டுநேரத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அருகில் வந்து சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டார். உடனே பேரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கொள்ளையனை தேடிய போது அவர் இருட்டில் மின்னல் வேகத்தில் தப்பினார்.
இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.
அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.
வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பொருளூரை சேர்ந்தவர் திருவாண்டசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது70). வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் முகவரி கேட்பதுபோல் பழனியம்மாளிடம் வழி கேட்டார். திடீரென கையில் இருந்த மிளகாய்பொடியை பழனியம்மாள் முகத்தில் தூவினார். கண் எரிச்சலால் பழனியம்மாள் அலறிதுடித்தார்.
இதனைபயன்படுத்தி அந்தநபர் அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி திருடனை பிடித்து கள்ளிமந்தயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் குப்பாயிவலசை சேர்ந்த காளிமுத்து(52) என தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து வேறு ஏதேனும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கரிமேடு மேல பொன்னகரம் சிஸ்டர் ரோஸ் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டு வாசலுக்கு தண்ணீர் மோட்டாரை அணைக்க வந்தார்.
அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சாந்தி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எஸ்.எஸ்.காலனி ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் அழகுமலை (வயது30). இவர் மேலவெளிவீதியில் நடந்து சென்றபோது திடீர் நகர் முதல் பிளாக்கை சேர்ந்த செல்லப்பாண்டி (21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றான்.
இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.
பேரையூர்:
பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மனைவி வளர்மதி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருது சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரிய ஆலங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் வளர்மதி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தி.மு.க.வில் ஆதி திராவிடர் நல பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி செல்வி (வயது 42).
இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த 28 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி திருடன்,திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அவனை துரத்தி சென்றனர். எனினும் மர்ம நபர் தப்பி சென்று விட்டான்.
இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு சொக்கம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளார். இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். மேலும் சொக்கம்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
சொக்கம்பட்டி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
கோவை ஆனைமலையை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். இவருடைய மனைவி ரூத்குணசீலி (வயது 53).
இவரது சகோதரி சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று சிங்காநல்லூர் வந்த ரூத்குணசீலி இரவு 8.30 மணி அளவில் அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூத்குணசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் எடை கொண்ட 2 தங்கசெயின்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரது மனைவி பிர்தோஸ்(44). இவர் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பிர்தோஸ் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டல்:
ஈரோடு திண்டல் கே. எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி புஷ்பா (வயது 50) .
கணவன்-மனைவி இருவரும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெளியூர் செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிச் செயின்) திடீரென பிடித்து இழுத்து பறித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத புஷ்பா திருடன்..திருடன்... என கத்தினார். வெங்கட்ராமன் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அதற்குள் அந்த மர்ம நபர் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு யாரும் அங்கு வரவில்லை.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு வெங்கட்ராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நகை பறிப்பு நடந்த இடத்தின் அருகே பல்வேறு தனியார் வணிக வளாகங்கள் உள்ளன. அங்கு பொருத்தப்பட்டுள்ள உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் சமீப காலமாக தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி சித்ரா (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சித்ரா கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் சித்ராவின் வீட்டுக்கு வந்தது. அவர்கள் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படியும், அப்படி கழற்றி கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியது.
இதனால் பயந்து போன சித்ரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதே வேளையில் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை அந்த கும்பலிடம் இருந்து தப்பியது.
இதுகுறித்து சித்ரா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்