search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired teacher"

    • ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகர் 2-வது வடக்கு தெருவில் குடியிருந்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கர பாண்டியன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதி மணி ஆகிய இருவரையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். மேலும் அடையாளங்களை அழிக்க மிளகாய் பொடியையும் தூவி விட்டு சென்றனர்.

    இந்த வழக்கில் மதுரை சரக ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், டி.ஐ.ஜி பொன்னி ஆலோசனையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மனோகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை பதிவிறக்கம் செய்தும், செல்போன் டவர்களை ஆய்வு செய்து வந்ததில் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், சிலரை அருப்புக்கோட்டையிலும் சிலரை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இருந்தும் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சங்கரபாண்டியன் வீட்டில் இருந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் அதை தற்போது வரை பயன்படுத்தி வந்த ஒருவரையும், அதன் தொடர்ச்சியாக மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அவர்களிடம் விசாரிக்க இன்று ஐ.ஜி.அஸ்ரா கார்க் அருப்புக்கோட்டை வருகிறார்.  

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசிலா (வயது 65). இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3-வது மகன் குமரனுடன் தங்கி வசித்து வருகின்றனர். சுசிலாவிற்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அவர் உடலநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து பாத்ரூம் சென்ற தாண்டவராயன், சுசிலா அங்கு மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மரக்காணம் அருகே பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலியானார்.

    மரக்காணம்:

    சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது உறவினர் வீட்டின் திருமணம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள கணபதி நேற்று காலை மரக்காணம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் சென்னை செல்வதற்காக மரக்காணம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து சென்னை பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கணபதிக்கு இருக்கையில் இடம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்தார்.

    அந்த பஸ் நாரவாக்கம் என்ற இடத்தில் சென்ற போது படிக்கட்டில் பயணம் செய்த கணபதி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணபதியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கணபதியின் அண்ணன் பாண்டுரங்கன் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் இறந்த கணபதிக்கு வளர்மதி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    மேல்பாடி அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 67), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குருநாதனின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

    அதில், அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குருநாதன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் குருநாதனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து குருநாதன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மேக்காமண்டபம் மயிலோடும் பாறை விளையைச் சேர்ந்தவர் சில்வான்ஸ். இவரது மனைவி ஜெசி ஜெயனேட் (வயது 78), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ஜெசி ஜெயனேட் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தார்.

    உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஜெசி ஜெயனேட்டிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

    செயின் பறிப்பு குறித்து ஜெசி ஜெயனேட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தோகைமலை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தோகைமலை:

    தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நிமிலா. நேற்று முன்தினம் இரவு வீட்டில் காற்றோட்டத்திற்கா கதவை திறந்து வைத்து விட்டு நிமிலா மற்றும் அவரது கணவர் ரெங்கராஜ், அவரது மருமகள் பிரியா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நிமிலாவின் மகன் கோபிநாத் புதுவாடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டு இருந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியை நிமிலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அருகில் தூங்கி கொண்டு இருந்த பிரியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியையும் பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த பிரியா திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர முற்பட்ட போது அவர்களது வீட்டின் வெளிபுறத்தில் உள்ள கதவின் தாழ்பால் திருடர்களால் ஏற்கனவே சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர்களால் உடனே உதவிக்கு வரமுடியவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த நிமிலா, ரெங்கராஜ், பிரியா ஆகியோரை மிரட்டி பீரோ சாவியை வாங்கிய திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்தையும் அவர்களின் கண் எதிரோ எடுத்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து நிமிலா தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×