search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traveled"

    • ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
    • பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    கோவை,

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் செய்தார். காந்திபுரத்தில் இருந்து ஹோப் கல்லூரி வரை அவர் பயணம் மேற்கொண்டார்.

    பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறுகையில் கோவையில் முதல் பெண் பஸ் டிரைவரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே பஸ்சில் அவருடன் பயணித்தேன்.

    பெண்களால் எந்த நிலையிலும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக ஷர்மிளாவின் பணி இருக்கிறது என்றார்.

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் பயணம் செய்தனர். #diwalifestival #train #governmentbus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 20 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் சென்னையில் 6 இடங்களில் இருந்து இந்த பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றன.

    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 1405 சிறப்பு பஸ்கள் உள்பட மொத்தம் 2931 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் திருவண்ணாமலை செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் அங்கு பயணிகள் கூட்டம் நேற்று மாலையில் இருந்து அதிகரித்தது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டதால் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு முழுவதும் மட்டுமின்றி விடிய விடிய மக்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பஸ்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 907 பேர் பயணம் செய்தனர். இது தவிர ஆம்னி பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையை சேர்த்தால் சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.

    இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து 3575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்றைவிட கூடுலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய ஏதுவாக 6 பஸ் நிலை யங்களுக்கும் இணைப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. அதிக கட்டணம் வசூலித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சிலர் பயணம் செய்தனர். ஏழை மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அரசு பஸ்களில் இருக்கை வசதி சரியாக இல்லாததோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பஸ் பயணத்தை விட ரெயில் பயணமே பாதுகாப்பாக இருப்பதாக கருதி பெரும்பாலான மக்கள் அதனை விரும்பி தேர்வு செய்கின்றனர். அதிலும் பஸ்சை விட ரெயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் நெரிசலில் சிக்கி பயணம் செய்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

    நீண்ட தூரம் செல்லக் கூடிய ரெயில்களில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் தொங்கி கொண்டே பயணம் செய்தனர். படிக்கட்டில் கூட நிற்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். இன்று பகலில் செல்லும் ரெயில்களும் நிரம்பி வழிந்தன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சேலம், கோவை, திருவனந்தபுரம் செல்லக் கூடிய ரெயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. #diwalifestival #train #governmentbus
    மரக்காணம் அருகே பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலியானார்.

    மரக்காணம்:

    சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது உறவினர் வீட்டின் திருமணம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள கணபதி நேற்று காலை மரக்காணம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் சென்னை செல்வதற்காக மரக்காணம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து சென்னை பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கணபதிக்கு இருக்கையில் இடம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்தார்.

    அந்த பஸ் நாரவாக்கம் என்ற இடத்தில் சென்ற போது படிக்கட்டில் பயணம் செய்த கணபதி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணபதியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கணபதியின் அண்ணன் பாண்டுரங்கன் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் இறந்த கணபதிக்கு வளர்மதி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    காரிமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜ் தர்மபுரியில் இருந்து செல்லும் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்ததாக தெரிகிறது. காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தார். பின்னர் பஸ் புறப்பட்ட போது கனகராஜ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×