search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dealer wife"

    வியாபாரி மனைவியிடம் 6 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை கரிமேடு மேல பொன்னகரம் சிஸ்டர் ரோஸ் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டு வாசலுக்கு தண்ணீர் மோட்டாரை அணைக்க வந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சாந்தி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் எஸ்.எஸ்.காலனி ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் அழகுமலை (வயது30). இவர் மேலவெளிவீதியில் நடந்து சென்றபோது திடீர் நகர் முதல் பிளாக்கை சேர்ந்த செல்லப்பாண்டி (21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    ×