search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகை பறிப்பு
    X

    கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகை பறிப்பு

    மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    பேரையூர்:

    பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மனைவி வளர்மதி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருது சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரிய ஆலங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் வளர்மதி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×