என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்2 Aug 2018 8:33 AM GMT
ஒட்டன்சத்திரம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பொருளூரை சேர்ந்தவர் திருவாண்டசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது70). வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் முகவரி கேட்பதுபோல் பழனியம்மாளிடம் வழி கேட்டார். திடீரென கையில் இருந்த மிளகாய்பொடியை பழனியம்மாள் முகத்தில் தூவினார். கண் எரிச்சலால் பழனியம்மாள் அலறிதுடித்தார்.
இதனைபயன்படுத்தி அந்தநபர் அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி திருடனை பிடித்து கள்ளிமந்தயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் குப்பாயிவலசை சேர்ந்த காளிமுத்து(52) என தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து வேறு ஏதேனும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X