என் மலர்
நீங்கள் தேடியது "god mother"
பேரையூர்:
திருமங்கலம் அய்யப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோசலை (வயது65). இவர்களது மகள் சக்கரையம்மாள் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் நிர்வாக அலுவலராக உள்ளார்.
நேற்று கடைக்கு சென்று விட்டு கோசலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வந்தனர்.
அவர்கள் கோசலையிடம் இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நகைகளை கழுத்தில் அணிந்து செல்லாதீர்கள் என போலீஸ் போல் கூறி உள்ளனர். மேலும் நகைகளை கழற்றி தாருங்கள் பேப்பரில் சுற்றித் தருகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இதனை நம்பிய கோசலை தான் அணிந்திருந்த 5 மற்றும் 3 பவுன் தங்க சங்கிலிகளை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பேப்பரில் வைத்து சுற்றி கொடுத்து விட்டு 2 இளைஞர்களும் சென்று விட்டனர்.
வீட்டிற்கு வந்த கோசலை பேப்பரை பிரித்து பார்த்த போது நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள முகமேதாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன். இவர் அரசு கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று இரவு அங்குள்ள ஒரு கடைக்கு காய்கறி வாங்கச் சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வீரம்மாளிடம் முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டினர்.
அதனை வீரம்மாள் வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் இருந்த நபர் வீரம்மாளின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.
வீரம்மாள் ‘திருடன், திருடன்’ என்று அலறினார். இதனை கேட்ட பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக வீரம்மாள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலைவீசி தேடிவவருகிறார்.






