search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail sentence"

    • கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர்.
    • வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் அங்குள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு பட்டாம்பி போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

    • கிரிஸ் வூ 32 வயதான ராப் பாடகர்.
    • சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    பீஜிங்

    கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 42). இவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 31) என்பவர்தான் தனது குடும்ப பிரச்சினைக்கு காரணம் என பிரித்திவிராஜ் நினைத்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி லாரன்ஸ் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 1-ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து அப்போது உத்தமபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன் இந்த வழக்கில் பிரித்திவிராஜ் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டியன் மகன் ராஜேஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.

    இந்த வழக்கில் கடந்த 8-ந் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் ராஜேஷ்குமார் நிரபராதி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்ட விரோதமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராஜேஷ்குமார் 29 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.

    ராஜேஷ்குமார் சட்ட விரோதமாக சிறையில் இருந்ததற்கு சட்டப்படி இழப்பீடு பெற தகுதியுடையவர். விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் உரிய இழப்பீடு பெற அவர் நீதிமன்றத்தை நாடலாம். இழப்பீட்டு தொகை இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த வழக்கிலும் விசாரணை அதிகாரியாக நியமிக்க கூடாது. ஏற்கனவே விசாரணை செய்து வரும் வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தற்போது சிவகங்கையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். தற்போது இவர் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 2009-ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், பிரிவு 13 டி பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம், குப்பன் துறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (33). கூலி தொழிலாளி.

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் குப்பன் துறை பகுதியில் ஒரு வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் செந்தில்குமார் நைசாக பேச்சு கொடுத்து அந்த மாணவிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 20 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். மேலும் இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    • ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
    • இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம்-ஆவாரங்காடு கிராம பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக அப்போது பழையனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.

    இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மற்ற 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் நேற்று முன்தினம் (3-ந்தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    அன்றைய நாள் குற்றவாளிகள் 27 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக்களை கேட்டார். அதனை தொடர்ந்து இன்று (5-ந்தேதி) தீர்ப்பின் முழு விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

    இதையொட்டி இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பின் விவரம் அறிய கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து 11.45 மணி அளவில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார்.

    அதில், 2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இங்கிலாந்தில் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்திய வம்சாவளி வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரை சேர்ந்தவர் ஹன்ஷாலா படேல் (22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

    இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர சிரியா செல்ல முயன்றார். நண்பர் சப்வான் மன்சூர் (23) என்பவரும் இவருடன் செல்ல திட்டமிட்டிருந்தார்.

    இதை அறிந்த போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி நடைபெற்றது.

    இவர்கள் மீது பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஹன்ஷாலா படேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு அறிவித்தது.

    அதை தொடர்ந்து அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    சீனாவுக்கு ரகசியங்களை விற்ற அமெரிக்க முன்னாள் உளவாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள லீஸ்பர்க் நகரை சேர்ந்தவர் கெவின் பி.மல்லோரி (62). ராணுவ வீரரான இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தில் (சி.ஐ.ஏ.) கடந்த 2012-ம் ஆண்டு வரை உளவாளியாக பணிபுரிந்தார்.

    அதன் பின்னர் இவர் வர்த்தக ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவரது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது.

    அதன்பின்னர் இவர் ஒரு சீன இணைய தள நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். நாளடைவில் அமெரிக்காவில் இருந்து கொண்டே சீனாவுக்கு உளவு வேலை பார்த்தார். 2 தடவை சீனாவுக்கு சென்று வந்த அவர் டெலிபோன் மற்றும் இ-மெயில் மூலம் சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்.

    அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய ரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்தார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு இவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி ஷெரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யு.கே.ஜி. படித்து வந்தாள். அவளது வீட்டின் அருகே திருச்சி கூனிபஜார் கோரி மேடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற முகமது இஸ்லாம் (43) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பக்கத்து வீடு என்பதால் ஷெரீனாவிடம் அப்பாஸ் நன்றாக பழகி வந்துள்ளார். கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார்.

    அப்பாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் உள்ள நிலையில், பெண் குழந்தை இல்லாததால் ஷெரீனாவிடம் மிகவும் பாசமுடன் பழகியுள்ளார். இதனால் அவளது பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 26.11.2017 அன்று ஷெரீ னாவை தனியாக அழைத்து சென்ற அப்பாஸ், அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த ஷெரீனாவிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறவே அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அப்பாசிடம் சென்று தட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ஷெரீனாவை துண்டு துண்டாக வெட்டி கொன்று ஆற்றில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 20.2.2018 அன்று திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷெரீனாவின் தந்தை புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி மகிளினி முன்னிலையில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
    தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரில் 5 பேர் இன்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    மதுரை:

    மதுரையில் 2007-ம் ஆண்டு தினகரன் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த வினோத், கோபிநாத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

    இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட ராமையா பாண்டி, ஆரோக்கியபிரபு, சுதாகர், ரூபன், மாலிக் பாட்சா உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.

    இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    இதற்கிடையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆரோக்கியபிரபு, ராமையாபாண்டி, ரூபன், சுதாகர், மாலிக்பாட்சா ஆகியோர் இன்று மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
    மதுரை:

    மதுரையில் கடந்த 2007-ம் ஆண்டு தினகரன் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகம் தீப்பற்றி எரிந்தது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் வினோத், கோபிநாத், காவலாளி முத்து ராமலிங்கம் ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

    சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து அட்டாக் பாண்டி, ஊமச்சிகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    அதில், பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக் பாட்சா ஆகிய 9 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பிக்க அரசு ஊழியரான துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் துணையாக இருந்துள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டம் 217 மற்றும் 221 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளியாகிறார். அவர் வருகிற 25-ந்தேதி (இன்று) கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அப்போது தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கூறினர்.

    அதன்படி இன்று ராஜாராம் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி முன்பு ஆஜரானார்.அப்போது நீதிபதிகள், நீங்கள் நினைத்து இருந்தால் பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தை தடுத்து இருக்கலாம் என்று ராஜாராமிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இல்லை என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், சம்பவம் நடந்து முடிந்த பிறகாவது நீங்கள் உங்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்து இருக்கலாமே? என கேட்டனர். அதற்கு ராஜாராம், துப்பாக்கியை ஜீப்பில் வைத்திருந்தேன் என்றார்.

    எது எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் கடமையை செய்ய தவறி விட்டீர்கள். எனவே இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி. உங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று ராஜாராமிடமே நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர் தற்போது எனக்கு 62 வயது ஆகிறது. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், உங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 217 (பொது ஊழியராக இருக்கும் நபர் சட்டத்திற்கு கீழ்படியாத நபர்களை காப்பாற்றுதல்), 221 (குற்றவாளி தப்பிக்க துணையாக இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே 2 பிரிவுகளுக்கும் சேர்ந்து மொத்தம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    தண்டனை பெற்றுள்ள ராஜாராம் சம்பவம் நடந்த போது டி.எஸ்.பி.யாக இருந்து பின்னர் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #MadrasHCBench
    சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 33). விவசாயி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி பொம்மனப்பாடியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார். அதில், ராஜாவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டுகளும், 3 மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×