search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail sentence"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    • 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு ஐ.பி.சி. 354 (எ) பிரிவின் கீழ் பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மற்றுமொரு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஐ.பி.சி. 341 பிரிவின் கீழ் பெண்களை சீண்டியதற்காக ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதனை ஏக காலத்தில் கடுங்காவல் சிறை தண்டனையாக அனுபவிக்கவும் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அபராதமாக மொத்தம் ரூ.20 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டது.

    இவ்வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு உடந்தையாக இருந்த முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணணுக்கு ரூ.500 மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கு சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும், இவ்விருவர் மீதும் தொடரப்பட்ட ஐ.பி.சி. 506 பிரிவின் கீழ் மிரட்டிய வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

    கோர்ட்டில் 7 ஆண்டிற்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட விதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமின் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர்.

    இதன் மீதான விசாரணையில் முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
    • கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதியன்று நிறைவடைந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந்தேதி (இன்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் கோர்ட்டிற்கு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து கோர்ட்டிற்கு வந்த நீதிபதி புஷ்பராணி, 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,5௦௦ அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    கோர்ட்டில் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட வீதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர். இது தொடர்பாக இன்று மதியம் 3 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதில் இவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் கூறினர்.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    விழுப்புரம்:

    கடந்த 2021 -ம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது தூக்கனாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகனை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் 2.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி தேன்மொழி கஞ்சா கடத்திய முருகனுக்கு 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு கஞ்சா கடத்திய வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    • மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    தர்மபுரியை சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி நெல்லைக்கு ரெயிலில் வந்தார்.

    அவர் பல்கலைக்கழகம் செல்வது குறித்து நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த மாரியப்பன் (வயது 48) என்ற தொழிலாளியிடம் வழி கேட்டுள்ளார்.

    அப்போது மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தப்பியோடிய போது கீழே விழுந்துள்ளார். அப்போது மாணவியை தூக்கி விடுவது போல நடித்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு நெல்லை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி கவிபிரியா தீர்ப்பு கூறினார். அப்போது மாரியப்பனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

    • கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
    • ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.

    அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
    • மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.

    இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.

    அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.

    பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பூம்பாறையை அடுத்த கூக்கால் பிரிவு அருகே கடந்த 3-ந்தேதி மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (வயது 22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடைக்கானல் சென்று விட்டு காரில் தனது விடுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அவரிடம் ஜீவா, பாலமுருகன் ஆகிய 2 பேரும் லிப்ட் கேட்டுள்ளனர்.

    வாலிபர்கள் மது அருந்தி இருந்த விபரம் தெரியாததால் அந்த பெண் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் காரில் இருந்து அவர்களை இறக்கி விட்டு இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    போலீசாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார். பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

    மேலும் அவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களை சரியான முறையில் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு பதிவு செய்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    நீதித்துறை வரலாற்றில் இது புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    • வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
    • ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டோபாடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 51). இவர் வீட்டில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் 13 வயது சிறுவன் டியூசனுக்கு வந்தான். அவனிடம் அப்பாஸ் தவறாக நடந்துள்ளார். டியூசன் சென்டரிலும், சிறுவனது வீட்டிலும் வைத்து அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை சிறுவன் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, அப்பாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    • கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் பிரபு ஈடுபட்டார்.
    • பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரபு (வயது 33).

    மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இவர் மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் 3 ஆண்டுகளுக்கு பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    நன்னடத்தைக்கான பிணை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், விதிமீறல் தொடர்பாக, மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மேட்டூர் ஆர்.டி.ஓ.தணிகாசலம், 2 ஆண்டுகள் 3 மாதத்திற்கு, பிரபுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
    • காயத்ரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிங்கப்பூர் :

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.

    இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பியாங் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்தபோது, பல மாதங்களாக அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி தனது வீட்டு பணிப்பெண் பியாங்குக்கு சரியாக உணவு அளிக்காமல் அடித்து கொடுமைபடுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.

    இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி மற்றும் பிரேமா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் காயத்ரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் காயத்ரியின் தாயார் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

    • கடந்த 2020-ம் ஆண்டு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பிரகாஷ் (வயது 39).

    இவர் செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் திண்டிவனத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

    தம்பதி கூலி தொழிலாளர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரும் அந்த செங்கல் சூளையில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மாணவியை பிரகாஷ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அழுது கொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணைகள் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×