search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்தல் வழக்கில் வியாபாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
    X

    கஞ்சா கடத்தல் வழக்கில் வியாபாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

    • வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    விழுப்புரம்:

    கடந்த 2021 -ம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது தூக்கனாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகனை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் 2.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி தேன்மொழி கஞ்சா கடத்திய முருகனுக்கு 2ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றொரு கஞ்சா கடத்திய வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    Next Story
    ×