search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீதித்துறை வரலாற்றில் முதல்முறை பாலியல் வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு- 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை
    X

    தண்டனை விதிக்கப்பட்ட ஜீவா மற்றும் பாலமுருகன்.

    நீதித்துறை வரலாற்றில் முதல்முறை பாலியல் வழக்கில் 9 நாட்களில் தீர்ப்பு- 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

    • அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பூம்பாறையை அடுத்த கூக்கால் பிரிவு அருகே கடந்த 3-ந்தேதி மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (வயது 22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடைக்கானல் சென்று விட்டு காரில் தனது விடுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அவரிடம் ஜீவா, பாலமுருகன் ஆகிய 2 பேரும் லிப்ட் கேட்டுள்ளனர்.

    வாலிபர்கள் மது அருந்தி இருந்த விபரம் தெரியாததால் அந்த பெண் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் காரில் இருந்து அவர்களை இறக்கி விட்டு இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    போலீசாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார். பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

    மேலும் அவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களை சரியான முறையில் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு பதிவு செய்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    நீதித்துறை வரலாற்றில் இது புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×