search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலக்காட்டில் 13 வயது சிறுவனை பாலியல் வன்முறை செய்த ஆசிரியருக்கு 30 ஆண்டு ஜெயில்
    X

    பாலக்காட்டில் 13 வயது சிறுவனை பாலியல் வன்முறை செய்த ஆசிரியருக்கு 30 ஆண்டு ஜெயில்

    • வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
    • ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டோபாடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 51). இவர் வீட்டில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் 13 வயது சிறுவன் டியூசனுக்கு வந்தான். அவனிடம் அப்பாஸ் தவறாக நடந்துள்ளார். டியூசன் சென்டரிலும், சிறுவனது வீட்டிலும் வைத்து அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை சிறுவன் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, அப்பாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    Next Story
    ×