என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்
- மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை:
தர்மபுரியை சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி நெல்லைக்கு ரெயிலில் வந்தார்.
அவர் பல்கலைக்கழகம் செல்வது குறித்து நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த மாரியப்பன் (வயது 48) என்ற தொழிலாளியிடம் வழி கேட்டுள்ளார்.
அப்போது மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தப்பியோடிய போது கீழே விழுந்துள்ளார். அப்போது மாணவியை தூக்கி விடுவது போல நடித்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நெல்லை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி கவிபிரியா தீர்ப்பு கூறினார். அப்போது மாரியப்பனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்