search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை
    X

    இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை

    இங்கிலாந்தில் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற இந்திய வம்சாவளி வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரை சேர்ந்தவர் ஹன்ஷாலா படேல் (22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

    இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர சிரியா செல்ல முயன்றார். நண்பர் சப்வான் மன்சூர் (23) என்பவரும் இவருடன் செல்ல திட்டமிட்டிருந்தார்.

    இதை அறிந்த போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி நடைபெற்றது.

    இவர்கள் மீது பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஹன்ஷாலா படேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு அறிவித்தது.

    அதை தொடர்ந்து அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    Next Story
    ×