search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhinakaran office burned"

    தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரில் 5 பேர் இன்று மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    மதுரை:

    மதுரையில் 2007-ம் ஆண்டு தினகரன் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த வினோத், கோபிநாத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

    இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட ராமையா பாண்டி, ஆரோக்கியபிரபு, சுதாகர், ரூபன், மாலிக் பாட்சா உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.

    இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

    இதற்கிடையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஆரோக்கியபிரபு, ராமையாபாண்டி, ரூபன், சுதாகர், மாலிக்பாட்சா ஆகியோர் இன்று மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    ×