search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jadeja"

    • ஜடேஜாவுக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அஸ்வின் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
    • சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.

    2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. அவர் லண்டனில் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். ஜடேஜாவுக்கு வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என்று 'நானும் அவரும் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் போது அவர் அந்த பாட்டை தான் போட்டு கேட்பார்' என்றும் தெரிவித்து இருந்தார்.


    இதனையடுத்து சென்னையில் நடந்த போட்டி ஒன்றில் ஜடேஜா மைதானத்தில் இருந்த போது DJ அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் அதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.



    • சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    அகமதாபாத்:

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

    அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.



    சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் profile-யை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது profile-லில் வைத்துள்ளார். லீக் போட்டிகளில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என குரல் கொடுத்த ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டார் ஜடேஜா என்றால் மிகையாகாது.

    • வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார்.
    • பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஜடேஜா மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து ஐ.பி.எல். கோப்பையை 5-வது முறையாக பெற்றுக் கொடுத்தார்.

    வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்த போது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார். பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    ஜடேஜா அருகில் வந்த போது டோனி அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது.

    கோப்பையை வாங்கும் தருணத்தில் ஜடேஜாவையும், அம்பதிராயுடுவையும் அழைத்து சென்று வாங்க வைத்து டோனி ரசித்தார். இந்த வீடியோ மற்றும் இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

    • எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
    • உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    கடைசி பந்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

    எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. அணிக்காக 5-வது ஐ.பி.எல். கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த ஊரில் பலர் சி.எஸ்.கே.வுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சரியத்தை கொடுத்தது.

    இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்கிறேன்.

    கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன். மோகித்சர்மா மெதுவான பந்துகளை அதிகம் வீசக் கூடியவர். மெதுவான யார்க்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.

    இந்த வெற்றி தருணத்தில் சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ அதை தொடருங்கள்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    • ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
    • அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் போராடி 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 60 ரன்களும் டேவோன் கான்வே 40 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து 20 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார், பதிரனா, தீக்சனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதிலும் குறிப்பாக 4 ஓவரில் வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து தசுன் சனாகா மற்றும் டேவிட் மில்லர் என 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதே போல பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் 22 (16) ரன்கள் எடுத்தார். அவர் இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் 175 ரன்களை எடுத்துள்ளார். பந்து வீச்சில் 19 விக்கெட்களை எடுத்து மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக அசத்தியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்களை எடுத்த முதல் இடதுகை பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

    குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஒரு ஸ்பின்னராக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. ரவீந்திர ஜடேஜா : 151*

    2. அக்சர் படேல் : 112

    3. ஆஷிஷ் நெஹ்ரா : 106

    4. ட்ரெண்ட் போல்ட் : 105

    5. ஜாகிர் கான் : 102

    அத்துடன் 2267 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக இருக்கிறார். அந்த பட்டியலில் ப்ராவோ (1560- 183), சுனில் நரேன் (1046 - 163) ஆகியோருக்கு பின் 3-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். 

    • இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
    • ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு குறித்து டோனி புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு மிகுந்த மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.

    போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் டோனி, ஜடேஜாவின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது எனவும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் அவர் அடித்த ரன்களே வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது எனவும் டோனி கூறினார்.

    இந்நிலையில் ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விருது வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுட்டுள்ளார். அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் அப்ஸ்டாக்ஸ்-க்கு தெரியுது. ஆனால் சில ரசிகர்களுக்குதான் தெரியவில்லை என டுவிட் செய்துள்ளார்.

    டோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்பாக ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனை ஒரு பேட்டியில் கூட இதை பற்றி ஜடேஜா கூறியிருந்தார். ஜடேஜா மற்றுமின்றி சில வீரர்களும் வியப்புடன் கூறினார்.

    ஆனால் இந்த பதிவில் ஜடேஜா கூறியிருப்பது தன்னை அவுட் ஆக சொன்ன சில ரசிகர்களை மறைமுக தாக்குவது போல இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

    • நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
    • ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.

    ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார் என சென்னை அணியின் கேப்டனான டோனி பாராட்டியுள்ளார்.

    இது குறித்து டோனி கூறியதாவது:-

    நாங்கள் டாஸ் இழந்தது கடைசியில் எங்களுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது. இது எங்களுக்கு மற்றொரு இறுதி போட்டி என சாதரணமாக கூறிவிட முடியாது. கடந்த 2 மாதங்களாக இதற்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். அனைவரின் பங்களிப்பும் இதில் உள்ளது.

    சேசிங்கில் குஜராத் அணி வலுவானது என்பதால் தான் முதலில் பந்துவீச விரும்பியதாக டாசின் போது கூறியிருந்தேன். ஜடேஜாவின் பந்துவீச்சு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தால் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே கடினம்.

    அதே போல் பேட்டிங்கின் போது கடைசி நேரத்தில் மொய்ன் அலியுடன் அவர் கூட்டணி சேர்ந்து விளையாடியதையும் மறந்து விட கூடாது. கடைசி நேரத்தில் எடுத்த ரன்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
    • டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார்.

    34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட்டை தொட்டார். 500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார். இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் வீரர் கபில்தேவ் ஆவார்.

    ஜடேஜா 63 டெஸ்டில் 263 விக்கெட்டும், 171 ஒரு நாள் போட்டியில் 189 விக்கெட்டும், 64 இருபது ஓவர் ஆட்டத்தில் 51 விக்கெட்டும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 503 விக்கெட் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

    சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் விவரம்:-

    கபில்தேவ், ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜேக் காலிஸ், போல்லாக் (தென் ஆப்பிரிக்கா), இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்ரிடி (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), சமிந்தா வாஸ் (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூ சிலாந்து), ஷகீப் அல் ஹாசன் (வங்காளதேசம்).

    • ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும்.
    • ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

    இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.

    அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.

    இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் லண்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 39.2 ஓவர்களில் 179 ரன்னில் சுருண்டது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ரவீந்திர ஜடேஜா (54 ரன்) மட்டும் ஆறுதல் அளித்தார். இந்த இலக்கை நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடிய விதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இது குறித்து இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த இங்கிலாந்து பயணத்தில் இது தான் எங்களது முதல் ஆட்டம். ஒரு மோசமான இன்னிங்சை வைத்து வீரர்களின் திறமையை எடைபோட்டு விடக்கூடாது. இது ஒரு மோசமான ஆட்டமாக அமைந்தது அவ்வளவு தான். மற்றபடி இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அதுவும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் (இந்தியா) விளையாடி விட்டு இங்கிலாந்துக்கு வந்து விளையாடுவது எப்போதும் கடினமாகத் தான் இருக்கும்.

    தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. பேட்டிங் திறமையை மேம்படுத்திக்கொள்ள இன்னும் கடினமாக உழைப்போம். எல்லோரிடமும் அனுபவம் உள்ளது. அதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    இது வழக்கமான இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று இருந்தது. ஆடுகளத்தன்மை தொடக்கத்தில் மிருதுவாக காணப்பட்டது. போக போக நன்றாக இருந்தது. ஆனால் உலக கோப்பை தொடரின்போது இவ்வளவு அதிகமாக புற்கள் உள்ள ஆடுகளங்களை கொடுக்க மாட்டார்கள், பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே இருக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    இதே கருத்தை பிரதிபலித்த இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், ‘ஒவ்வொரு ஆட்டத்தையும் வைத்து நான் அணியை மதிப்பிடுவதில்லை. பெரிய போட்டித் தொடரில் இது போன்று நடக்கத்தான் செய்யும். அதுவும் பிரதான போட்டி இன்னும் தொடங்கவே இல்லை. அதனால் இப்போது அச்சப்பட தேவையில்லை’ என்றார்.
    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவின் ‘நியூ லுக்’கை பார்த்து சக வீரர்கள் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. #IPL2019 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். இதில் ஜடேஜா தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றுவார். குறிப்பாக தாடி மீசையில் விதவிதமான ஸ்டைலை அறிமுகம் செய்வார். ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். நீண்ட காலமாக தாடியுடன் காட்சியளிக்கும் அவர் கடந்த முறை தாடியை சேவிங் செய்துவிட்டு, அதை ஒரு சவாலாக அறிமுகப்படுத்தினார்.

    தற்போது அவர் வெளிநாட்டுக்காரர்களை போல் தாடியை பிரவுன் கலரில் மாற்றியுள்ளார். இதை சக வீரர்கள் கிண்டல் செய்துள்ளனர். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
    ×