search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • கவுகாத்தி பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.

    நீங்கள் யார், உங்களுக்கு பிடித்தது என்ன என்பது அதற்கு நன்றாக தெரியும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கே தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணிணிக்கு தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என தெரிவித்தார்.

    • இந்திய வானிலை அமைப்புக்கு சொந்தமானது ‘இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள்.
    • ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 புத்தாண்டில் கடந்த 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் 'எக்ஸ்போசாட்' என்ற 'எக்ஸ்-ரே போலரிமீட்டர்' என்ற செயற்கைகோளை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி விண்ணில் ஏவிய ஆதித்யா-எல்1 விண்கலத்தை கடந்த 6-ந்தேதி இந்தியாவின் முதல் சூரிய ஆய்வகத்தை திட்டமிட்ட எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலைநிறுத்தியது. இந்த வெற்றிகரமான தொடக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு 12 திட்டங்களை செயல்படுத்த போவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அறிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து, இஸ்ரோ தற்போது, ஜி.எஸ்.எல்.வி.-எப்14 என்ற ராக்கெட்டில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. திரவ உந்துசக்தியைப் பயன்படுத்தும் மேம்பட்ட ராக்கெட்டாகும். இதனை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. தற்போது ராக்கெட்டில் செயற்கைகோள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்திய வானிலை அமைப்புக்கு (ஐ.எம்.டி.) சொந்தமானது 'இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள். காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    இது காலநிலை மற்றும் வானிலை தரவுகளை பெறுவதுடன் மற்றும் உந்துவிசை அமைப்பு ஒத்துழைப்பு ஆகிய அர்ப்பணிக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோள்களை உள்ளடக்கியது. இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3 டிஆர் இவை ஏற்கனவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புவி வட்ட சுற்றுப்பாதையில் உள்ளன. அடுத்ததாக தற்போது இன்சாட்-3 டிஎஸ் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு மே 29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி.- எப்12 ராக்கெட் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட வழிசெலுத்தும் என்.வி.எஸ்-01 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    அதிக திறன் கொண்ட இந்த ராக்கெட் 3 நிலைகளுடன் கிரையோஜெனிக் திரவ உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது. ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் திரவ எரிபொருளின் பயன்பாடு மிகவும் சிக்கலாக இருந்தாலும், இது அதிக எடை தூக்கும் திறனை கொண்டுள்ளது.

    நடப்பாண்டில் வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுக்கான சோதனை ராக்கெட் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின்படி, விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து விண்வெளிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதற்கும் பாதுகாப்பானதா? என்பதை உறுதிப்படுத்த பல சுற்று சோதனைகள் நடத்த உள்ளது.

    • 2023ல் இஸ்ரோ சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது
    • ஆதித்யா-எல்1 விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சென்ற வருடம், நிலவிற்கு சந்திரயான் எனும் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி ஏவுதளத்திலிருந்து ஆதித்யா-எல்1 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    சூரியனின் செயல்பாடுகளையும் வானிலையில் சூரியன் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்ய ஆதித்யா-எல்1 அனுப்பபட்டுள்ளது.

    இதற்காக இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் செயல்படும்.

    இந்த விண்கலத்தை பூமியிலிருந்து புறப்பட்டு 125 நாட்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் சூரியனுக்கு அருகே எல் 1 (Lagrange Point 1) எனும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முயற்சி நடந்தது.

    இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

    "இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடையும் வகையில் இந்தியா தொடர்ந்து பணியாற்றும். அற்பணிப்புடன் பணியாற்றிய விஞ்ஞானிகளை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அதில் அவர் தெரிவித்தார்.


    • ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி விண்வெளிக்கு புறப்பட்டது.
    • 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.

    சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும்.

    எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும்.

    ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது.

    • கடந்த செப்டம்பர் 2-ந்தேதி ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
    • சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

    பெங்களூரு:

    சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று மாலை அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    இன்று மாலை சுமார் 4 மணிக்கு லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

    அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சூரியனின் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும்.

    சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆதித்யா திட்டம் வெற்றி பெற்றால் அந்த வரிசையில் இந்தியா 5-வது நாடாக இணையும்.

    • எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
    • லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்கள் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 

    சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

    எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (நாளை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழைகிறது.

    குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

    பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள லக்ரேஞ்சியன்-1 புள்ளியில் இருந்து, சூரியனின் மேற்புற அடுக்குகளான குரோமோஸ்பியர், போட்டோஸ்பியர் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
    • ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இஸ்ரோ தனது முதல் 'எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் சோலார் பேனல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இஸ்ரோவின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள் ஒன்று பெண்களால் வடிவமைக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் காட்டுவதுடன், அனைத்து கருவிகளும், பல்வேறு சீர்திருத்தங்களை நிரூபிக்கின்றன.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் 4-வது கட்டத்தை எட்டிய உடன் என்ஜின் நிறுத்தி மீண்டும் இயக்கி நடத்தப்பட்ட சோதனை மூலம், விஞ்ஞானிகள் செயற்கைகோளின் உயரத்தை சுமார் 350 கிலோ மீட்டர் ஆக குறைத்தனர். பரிசோதனை தொகுதி-3 (போயம்-3) ஆய்வு வெற்றிகரமாக நடந்தது. எக்ஸ்போசாட் செயற்கைகோள் உலகளாவிய வானியல் சமூகத்திற்கு கணிசமான நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டிலும் போயம்-3-ஐ பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இதுபோன்ற அறிவியல் பரிசோதனைகளை செய்தது. புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில் தான் அதிக அளவிலான செயற்கைகோள்கள், விண்வெளிக்கழிவுகள் உள்ளன. இதனால் 300 கிலோ மீட்டர் புவி தாழ்வட்டபாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் 4-வது நிலை (பி.எஸ் 4) எந்திரம் மூலம் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    விண்வெளி அடிப்படையிலான ஆய்வு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், 'எக்ஸ்போசாட்' பணி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் விண்கலத்திற்கான 2 சோதனை ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், பி.எஸ்.எல்.வி. எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஸ்க்ராம்ஜெட் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன. அதேபோல் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
    • செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.

    அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் இடையிலான பனிப்போரின்போது, ரஷியாவின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதையடுத்து 'வேலா' என்று அழைக்கப்பட்ட உளவு செயற்கைக்கோள்களை பூமியை சுற்றி ஏவியது.

    ஒரு வேளை ரஷியா ரகசிய அணுசக்தி சோதனையில் ஈடுபட்டால், அதிலிருந்து வரும் காமா கதிர்களை அந்த செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறிய அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. சந்தேகித்த வாறே காமா கதிர்களை அமெரிக்கா செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.

    ஆனால் இந்த காமா கதிர்கள் ரஷியாவில் இருந்து வந்தவை அல்ல. மாறாக, பூமியையும், சூரிய குடும்பத்தையும் தாண்டி, விண்வெளியில் இருந்து வந்த காமா கதிர் வெடிப்புகள் ஆகும்.

    இதையடுத்து அந்த காமா கதிர்கள் பற்றிய ஆய்வை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. பல வருட ஆய்வுக்கு பிறகு காமா கதிர் வெடிப்புகள் சூப்பர் நோவாக்கள் மற்றும் சூரியனில் கருந்துளைகள் உருவாகும்போது வெளி வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சூரியனின் கருந்துளையை படம் பிடிக்க உலக அளவில் விண்வெளி ஆய்வாளர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேறியது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்தனர். கருந்துளையின் முதல் புகைப்படம் உலகம் முழுக்க சுமார் 8 தொலைநோக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

    ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியது.

    அதற்கு ஏ.ஆர்.2,665 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த துளை, பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்தப் பகுதி சூரியனின் மற்றப் பகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பது நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த பகுதி, பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச் செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சூரியனின் கருந்துளைகளை ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா சூரியனின் ஆய்வை இன்று வெற்றிகரமாக தொடங்கியது.

    இதற்காக 'எக்ஸ்போசாட்' (எக்ஸ்-ரே போலாரி மீட்டா் சாட்டி லைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது. அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது.

    எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் மூலம் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதை ஏவும் பணிக்காக 25 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    இன்று அதிகாலை எரிப்பொருள் நிரப்பும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    குறிப்பிட்ட நிமிடங்களில் குறிப்பிட்ட பாதையில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் பகுதிகள் பிரிந்தன.

    ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இது 60-வது ராக்கெட் ஆகும்.

    2024-ம் ஆண்டின் தொடக்கமான முதல்நாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சந்திரயான், ஆதித்யா செயற்கைக்கோள்களை தொடர்ந்து எக்ஸ்போசாட் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டு பரிசு அளித்து உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சூரியனின் கருந்துளை மற்றும் நட்சத்திரங்களை இந்தியா ஆய்வு செய்ய இது தொடக்கமாக இருக்கும் என்பதால் இது விண்வெளி ஆய்வில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

    இதற்காக 'எக்ஸ்பெக்ட்' (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), 'போலிக்ஸ்' (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிட்டு ஆய்வு செய்யும்.

    சூரியன் கருந்துளை தவிர நியூட்ரான் நட்சத்திரம் பற்றியும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். நிலவில் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே தன்மைகள் கொண்டவை அல்ல. சில நட்சத்திரங்கள் நீள நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    இவற்றில் இருந்து சில நட்சத்திரங்கள் மாறுபட்டு வெள்ளை நிறத்துடன் சிறிய வடிவில் இருக்கும். இந்த நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரங்கள் வெடிக்கும்போது என்ன நிகழும் என்பதை ஆய்வு செய்யவும் உலக விஞ்ஞானிகளிடம் போட்டி நிலவுகிறது.

    நட்சத்திரங்கள் வெடிப்பதை சூப்பர் நோவா என்று சொல்வார்கள். வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்துபோன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.

    நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் முக்கியமானது. இது பற்றியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் எக்ஸ்போ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை அந்த செயற்கைக்கோள் ஆராயும்.

    இதைத் தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப்பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

    ஏற்கனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    • ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    திருப்பதி:

    எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் உள்ள தூசு, நிறமாலை, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்ய உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    இதையடுத்து, பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

    இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
    • இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

    அத்துடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள், பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக வெசாட் என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தனர்.

    இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், செயற்கைகோள் செயல்பாடு மற்றும் ராக்கெட் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.

    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது.
    • சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இதற்கான அறிவிப்பை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய விக்யான் சம்மேளன கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.

    அப்போது அவர் கூறும்போது, குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்.) முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது. 'பாரத் விண்வெளி நிலையம்' என குறிப்பிடப்படும் இந்த லட்சிய திட்டப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, 20 முதல் 1,215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை உருவாக்க உள்ளோம். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை கொண்டு செல்ல முடியும். 2035-ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலைய பணி அமைந்துள்ளது, என்று தெரிவித்தார்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், சூரியனை ஒளிவட்ட சுற்றுப்பாதை எல் 1-ல் இருந்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூரிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான திட்டமாகும். எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டவுடன், ஆதித்யா எல்-1 அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும்.

    இந்த தரவு, இந்தியாவிற்கு மதிப்புமிக்கது மட்டுமல்ல, உலகளாவிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும். தற்போதைய நிலையில் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ந்தேதி எல்-1 புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விண்கலம் எல்-1 புள்ளியை மிக அருகில் நெருங்கி உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    ×