search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் விண்வெளி நிலையம்"

    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது.
    • சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் இதற்கான அறிவிப்பை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பாரதிய விக்யான் சம்மேளன கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.

    அப்போது அவர் கூறும்போது, குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 8 டன் எடையுள்ள, ரோபோ திறன்களைக் கொண்ட, சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்.) முதல் தொகுதியை, இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டு உள்ளது. 'பாரத் விண்வெளி நிலையம்' என குறிப்பிடப்படும் இந்த லட்சிய திட்டப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, 20 முதல் 1,215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை உருவாக்க உள்ளோம். தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை கொண்டு செல்ல முடியும். 2035-ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு மூலக்கல்லாக சர்வதேச விண்வெளி நிலைய பணி அமைந்துள்ளது, என்று தெரிவித்தார்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம், சூரியனை ஒளிவட்ட சுற்றுப்பாதை எல் 1-ல் இருந்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூரிய ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான திட்டமாகும். எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டவுடன், ஆதித்யா எல்-1 அடுத்த 5 ஆண்டுகளில் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கும்.

    இந்த தரவு, இந்தியாவிற்கு மதிப்புமிக்கது மட்டுமல்ல, உலகளாவிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சூரியனின் இயக்கவியல் மற்றும் பூமியில் மனித வாழ்வில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள இந்த தரவுகள் உதவும். தற்போதைய நிலையில் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ந்தேதி எல்-1 புள்ளியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விண்கலம் எல்-1 புள்ளியை மிக அருகில் நெருங்கி உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    ×