search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSLV C58"

    • தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
    • ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இஸ்ரோ தனது முதல் 'எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் சோலார் பேனல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இஸ்ரோவின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள் ஒன்று பெண்களால் வடிவமைக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் காட்டுவதுடன், அனைத்து கருவிகளும், பல்வேறு சீர்திருத்தங்களை நிரூபிக்கின்றன.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் 4-வது கட்டத்தை எட்டிய உடன் என்ஜின் நிறுத்தி மீண்டும் இயக்கி நடத்தப்பட்ட சோதனை மூலம், விஞ்ஞானிகள் செயற்கைகோளின் உயரத்தை சுமார் 350 கிலோ மீட்டர் ஆக குறைத்தனர். பரிசோதனை தொகுதி-3 (போயம்-3) ஆய்வு வெற்றிகரமாக நடந்தது. எக்ஸ்போசாட் செயற்கைகோள் உலகளாவிய வானியல் சமூகத்திற்கு கணிசமான நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டிலும் போயம்-3-ஐ பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இதுபோன்ற அறிவியல் பரிசோதனைகளை செய்தது. புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில் தான் அதிக அளவிலான செயற்கைகோள்கள், விண்வெளிக்கழிவுகள் உள்ளன. இதனால் 300 கிலோ மீட்டர் புவி தாழ்வட்டபாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் 4-வது நிலை (பி.எஸ் 4) எந்திரம் மூலம் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    விண்வெளி அடிப்படையிலான ஆய்வு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், 'எக்ஸ்போசாட்' பணி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் விண்கலத்திற்கான 2 சோதனை ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், பி.எஸ்.எல்.வி. எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஸ்க்ராம்ஜெட் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன. அதேபோல் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
    • செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.

    அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் இடையிலான பனிப்போரின்போது, ரஷியாவின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதையடுத்து 'வேலா' என்று அழைக்கப்பட்ட உளவு செயற்கைக்கோள்களை பூமியை சுற்றி ஏவியது.

    ஒரு வேளை ரஷியா ரகசிய அணுசக்தி சோதனையில் ஈடுபட்டால், அதிலிருந்து வரும் காமா கதிர்களை அந்த செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறிய அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. சந்தேகித்த வாறே காமா கதிர்களை அமெரிக்கா செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.

    ஆனால் இந்த காமா கதிர்கள் ரஷியாவில் இருந்து வந்தவை அல்ல. மாறாக, பூமியையும், சூரிய குடும்பத்தையும் தாண்டி, விண்வெளியில் இருந்து வந்த காமா கதிர் வெடிப்புகள் ஆகும்.

    இதையடுத்து அந்த காமா கதிர்கள் பற்றிய ஆய்வை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. பல வருட ஆய்வுக்கு பிறகு காமா கதிர் வெடிப்புகள் சூப்பர் நோவாக்கள் மற்றும் சூரியனில் கருந்துளைகள் உருவாகும்போது வெளி வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சூரியனின் கருந்துளையை படம் பிடிக்க உலக அளவில் விண்வெளி ஆய்வாளர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேறியது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்தனர். கருந்துளையின் முதல் புகைப்படம் உலகம் முழுக்க சுமார் 8 தொலைநோக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

    ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியது.

    அதற்கு ஏ.ஆர்.2,665 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த துளை, பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்தப் பகுதி சூரியனின் மற்றப் பகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பது நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த பகுதி, பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச் செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சூரியனின் கருந்துளைகளை ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா சூரியனின் ஆய்வை இன்று வெற்றிகரமாக தொடங்கியது.

    இதற்காக 'எக்ஸ்போசாட்' (எக்ஸ்-ரே போலாரி மீட்டா் சாட்டி லைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது. அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது.

    எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் மூலம் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதை ஏவும் பணிக்காக 25 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    இன்று அதிகாலை எரிப்பொருள் நிரப்பும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    குறிப்பிட்ட நிமிடங்களில் குறிப்பிட்ட பாதையில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் பகுதிகள் பிரிந்தன.

    ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இது 60-வது ராக்கெட் ஆகும்.

    2024-ம் ஆண்டின் தொடக்கமான முதல்நாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சந்திரயான், ஆதித்யா செயற்கைக்கோள்களை தொடர்ந்து எக்ஸ்போசாட் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டு பரிசு அளித்து உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சூரியனின் கருந்துளை மற்றும் நட்சத்திரங்களை இந்தியா ஆய்வு செய்ய இது தொடக்கமாக இருக்கும் என்பதால் இது விண்வெளி ஆய்வில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

    இதற்காக 'எக்ஸ்பெக்ட்' (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), 'போலிக்ஸ்' (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிட்டு ஆய்வு செய்யும்.

    சூரியன் கருந்துளை தவிர நியூட்ரான் நட்சத்திரம் பற்றியும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். நிலவில் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே தன்மைகள் கொண்டவை அல்ல. சில நட்சத்திரங்கள் நீள நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    இவற்றில் இருந்து சில நட்சத்திரங்கள் மாறுபட்டு வெள்ளை நிறத்துடன் சிறிய வடிவில் இருக்கும். இந்த நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரங்கள் வெடிக்கும்போது என்ன நிகழும் என்பதை ஆய்வு செய்யவும் உலக விஞ்ஞானிகளிடம் போட்டி நிலவுகிறது.

    நட்சத்திரங்கள் வெடிப்பதை சூப்பர் நோவா என்று சொல்வார்கள். வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்துபோன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.

    நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் முக்கியமானது. இது பற்றியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் எக்ஸ்போ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை அந்த செயற்கைக்கோள் ஆராயும்.

    இதைத் தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப்பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

    ஏற்கனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

    இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
    • இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.

    அத்துடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள், பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக வெசாட் என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தனர்.

    இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், செயற்கைகோள் செயல்பாடு மற்றும் ராக்கெட் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.

    ×