search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL Season 2019"

    மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #IPL2019 #CricketBetting
    பெங்களூரு:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

     

    இந்நிலையில், மங்களூரு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சோதனையின்போது ஐந்து விலையுயர்ந்த செல்போன்களும், ரூ.4.20 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.  ஐ.பி.எல். போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IPL2019 #CricketBetting
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #KXIPvSRH

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

    இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூ டை, முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அங்கித் ராஜ்பூத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.





    ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியினர் தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் நேர்த்தியான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். 2-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் பேர்ஸ்டோ (1 ரன்) கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட விஜய் சங்கர் 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் பவுண்டரியை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்னே எடுத்து இருந்தது. 10 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்த போது விஜய் சங்கர் (26 ரன், 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய முகமது நபி 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 15.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. டேவிட் வார்னர் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும், மனிஷ் பாண்டே 15 பந்துகளில் 2 பவுண்டயுடன் 19 ரன் சேர்த்து முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக மட்டையை சுழற்றினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன்னும், தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (16 ரன், 14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 13 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. லோகேஷ் ராகுல் 34 பந்திலும், மயங்க் அகர்வால் 40 பந்திலும் அரைசதத்தை எட்டினார்கள்.

    அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (55 ரன், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-லோகேஷ் ராகுல் இணை 114 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (1 ரன்), மன்தீப் சிங் (2 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும், சாம் குர்ரன் 3 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ள நிலையில், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #IPL2019 #RR
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. இரு அணிகளும் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நான்காவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் ஒரு அணி வெற்றி பெற்றே தீரும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.

    அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக சரணடைந்தது. ஐந்து போட்டியில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்த போதிலும், இன்னும் பயப்பட தேவையில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறுகையில் ‘‘எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.



    தொரடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 57 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. நேற்றோடு 21 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன.

    இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் போட்டிக்கு போட்டி சிக்சர் மழையாக பொழிந்து வருகிறது. ஐந்து போட்டிகளில் நான்கில் களம் இறங்கிய அவர் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். மேலும் அந்த அணியின் நிதிஷ் ராணா 12 சிக்கர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.



    மொத்தமாக 57 சிக்சர்கள் அடித்து கொல்கத்தா முதலிடம் வகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 32 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி 31 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 30 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 29 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 29 சிக்சர்களுடன் 6-வது இடத்திலும், சிஎஸ்கே 25 சிக்சர்களடன் 7-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 24 சிக்சர்களுடன் 8-வது இடத்திலும் உள்ளன.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை பந்தாடி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #RRvKKR

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய அழைத்தார். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பயங்கரமாக காற்று வீசி புழுதி கிளம்பியது. இதனால் கொல்கத்தா விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா முககவசம் அணிந்தபடி களம் கண்டார்.

    இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவின் (5 ரன்) விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தது. அடுத்து வந்த வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு ஆடினர். ஆனால் விக்கெட் கைவசம் இருந்தும் கொல்கத்தாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் தவித்தனர். ஜோஸ் பட்லர் 37 ரன்களும், திரிபாதி 6 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள்.





    ஸ்டீவன் சுமித் 73 ரன்களுடனும் (59 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னுடனும் (14 பந்து) களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 3 மற்றும் அதற்கு குறைவான விக்கெட்டுடன் ஒரு அணி எடுத்த குறைந்த ஸ்கோர் இது தான்.

    அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரின் (47 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கிறிஸ் லின் (50 ரன், 32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) இருவரும் அதிரடியில் வெளுத்து வாங்கினர். இவர்களின் சரவெடி ஆட்டம் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது.

    கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராபின் உத்தப்பா 26 ரன்களுடனும், சுப்மான் கில் 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடி 4-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தானுக்கு இது 4-வது தோல்வியாகும்.


    கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’-தான் என கவுதம் காம்பிர், மீண்டும் அவரது திறமை குறித்து சாடியுள்ளார். #IPL2019 #ViratKohli
    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், ஆர்சிபி-யில் தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் கேப்டன் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இதுவரை அவரை ஆர்சிபி கேப்டனாக வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கவுதம் காம்பிர் கூறியிருந்தார். இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.

    இந்த சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐந்து போட்டிகளிலும் ஆர்சிபி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘பேட்டிஸ்மேன் என்பதில் விராட் மாஸ்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேப்டன் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பது நான் எடுத்துக் கூறகிறேன். தொடர் தொடங்கும்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

    பிளாட் ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்தார்.

    அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் கிரிப்பிங் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி பொதுவாக டென்ஷன் ஆகமாட்டார். ஆனால் பஞ்சாப் அணிக்கெதிராக தீபக் சாஹர் அவரை டென்ஷனாக்கிவிட்டார். #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்கள் சேர்த்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சர்பிராஸ் அகமது, லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தனர்.

    ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகியோர் ரன்னைக் கட்டுப்படுத்த, பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 39 ரன்கள் என்ற நிலையில் 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார்.

    முதல் பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ‘ஸ்லோ’வாக வீச நினைத்த சாஹர், அதை புல்டாசாக வீசிவிட்டார். நடுவர் ‘நோ-பால்’ என அறிவிக்க, சர்பராஸ் கான் அதை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தையும் அதே மாதிரியே வீசினார். அதில் இரண்டு ரன் அடித்தார் சர்பராஸ். பந்து ஏதும் வீசப்படாமல் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.

    இதனால் டோனி டென்சன் ஆனார். தீபக் சாஹரிடம் வந்து நீண்ட நேரம் ஆலோசனை வழங்கினார். பின்னர் சாஹர் சிறப்பாக பந்து வீசி கடைசி பந்தில் டேவிட் மில்லரை க்ளீன் போல்டாக்கினார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வழக்கமாக எந்தவொரு நெருக்கடியான நேரத்திலும் எம்எஸ் டோனி எமோசனாக மாட்டார். ஆனால் நேற்று டென்ஷன் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களின் சிறிய தவறு தோல்வி காரணமாக அமைந்துள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே கூறியுள்ளார். #Rahane
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

    நாங்கள் 190 ரன்னுக்கு மேல் குவித்தோம். இது நல்ல ஸ்கோர். இந்த ஆடுகளத்தில் 150-க்கு மேல் எடுத்தாலே சிறப்பான ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் வார்னரின் அதிரடியை கட்டுப்படுத்த தவறவிட்டோம். எங்களது பந்துவீச்சாளர்கள் செய்த சிறிய தவறால் அவர் அபாரமாக ஆடிவிட்டார். இது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் வீரர்கள் பவர்பிளேயை நன்றாக ஆடி ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, இது எளிதான வெற்றி அல்ல. இந்த ஆட்டம் மிகவும் சவாலாகவே இருந்தது. எங்களது இதே அதிரடி ஆட்டம் தொடரும் என்று நம்புகிறேன் என்றார். #Rahane
    ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையில் மே 12-ந்தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #IPL2019 #CSK #ChennaiChepauk
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சென்னையில் தொடங்குகிறது.

    கடந்த ஐ.பி.எல். கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5-ந் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு மட்டுமே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் ‘லீக்‘ அட்டவணைகளின் முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மே 5-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று போட்டி நடைபெறும் தேதி, இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் தெரிவித்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந் தேதிவரை நடக்கிறது. இதை பாதிக்காத வகையில் ஐ.பி.எல். அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா அணிகளும் தங்களது சொந்த மண்ணில் 7 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை.

    மேற்கு வங்காளத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனால் கொல்கத்தா நைட்ரைடரில் ஈடன்கார்டன் மைதானத்தில் மோதும் ஆட்டங்கள் அதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது.

    ‘பிளே ஆப்’ சுற்று ஆட்டங்கள் விவரம் அறிவிக்கப்படாவிட்டாலும் இறுதிப் போட்டி சென்னையில் மே 12-ந்தேதி நடைபெறும் என்று தெரிகிறது. நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    பிளேஆப் சுற்றில் ‘குவாலிபையர்-1’ ஆட்டம் மே 7-ந்தேதியும், ‘எலிமினேட்டர்’ மே 8-ந்தேதியும், ‘குவாலிபையர்-2’ மே 10-ந்தேதியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். ஆட்டங்களில் ஏதாவது நகரங்களில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் மாற்று இடமாக விசாகப்பட்டினத்தை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. #IPL2019 #CSK #ChennaiChepauk
    ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7 கட்ட தேர்தல் நடந்தாலும் கொல்கத்தா அதற்குரிய 7 ஹோம் மேட்ச்களை பெற்றுள்ளது. #IPL2019
    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

    தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-

    1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)

    2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)
    3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)

    4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)

    5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)

    6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)

    7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)

    8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)

    9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)
    10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)

    11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)
    12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

    13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி)

    14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)

    15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

    16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)

    17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)

    18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)
    19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)

    20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்)
    21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)

    22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)

    23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

    24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)

    25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)

    26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)

    27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)
    28. ஏப்ரல் 13:-  கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)

    29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)
    30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்)

    31. ஏப்ரல் 15:- மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை)

    32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)

    33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)

    34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)

    35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)

    36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)
    37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)

    38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)
    39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)

    40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)

    41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)

    42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)

    43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)

    44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

    45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)

    46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
    47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)

    48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)

    49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)

    50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை)

    51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)

    52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)

    53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)
    54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)

    55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)
    56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)
    போட்டிகள் அனைத்தும் நெருக்கடியான சூழ்நிலையை நோக்கிச் செல்லும் என்பதால், உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் மிகவும் சிறப்பான தொடர் ஐபிஎல் என கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். #IPL2019
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் 2-வது வாரத்தில்தான் ஐபிஎல் தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.

    இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.

    சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.
    ஐபிஎல் தொடக்க சீசனை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னாள் வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேலரிகளுக்கு அவர்கள் பெயரை சூட்ட இருக்கிறது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.

    அந்த அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தை சொந்த மைதானமாகக் கொண்டு விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட், வார்னே, தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் போன்ற மூத்த வீரர்கள் விளையாடியுள்ளனர்.

    மேலும், ஜேம்ஸ் பால்க்னெர், நமன் ஓஜா, முனாப் பட்டேல், பிரவின் தம்பே போன்றோரும் விளையாடியுள்ளனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிகளுக்கு இந்த வீரர்களின் பெயர்களை சூட்ட முடிவு செய்துள்ளது.
    ×