search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WorldCup 2019"

    போட்டிகள் அனைத்தும் நெருக்கடியான சூழ்நிலையை நோக்கிச் செல்லும் என்பதால், உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் மிகவும் சிறப்பான தொடர் ஐபிஎல் என கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். #IPL2019
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் 2-வது வாரத்தில்தான் ஐபிஎல் தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.

    இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.

    சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.
    ×