search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2018"

    ஐபிஎல் தொடருக்கு திரும்பி மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாக இருந்தது என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் (2016 மற்றும் 2017) ஐபிஎல் தொடரில் விளையாட தடைபெற்றது. இந்த தடை விலகியதால் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலந்து கொண்டது. கலந்து கொண்டது அல்லாமல் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது.

    இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



    இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து தனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.



    வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'

    என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 



    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.



    7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி,  பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 


    4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.  ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

    9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார். 



    10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. 

    11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 



    16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.



    கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தது. 

    இரண்டாவது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 2 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்தது.

    3-வது ஓவரை மீண்டும் சஹார் வீசீனார். அந்த ஓவரில் அவர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது.

    ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் எடுத்துள்ளது. தவான் 18 ரன்களுடனும், வில்லியம்சன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH

    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன. சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் , ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடிய வர்கள்.

    சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.


    இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் அல்லது கரண் சர்மா, ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சஹா, ஷிகர் தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், பிரத்வெயிட், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது அல்லது பாசில் தம்பி.

    ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அசத்தினார்.

    10 பந்தில் 34 ரன்கள் குவித்த ரஷித் கான், 3 விக்கெட், 3 கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் செய்ய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ரஷித் கானின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை குறித்து பாராட்டி டுவிட் செய்திருந்ததார்.



    ஏராளமான ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, இந்தியாவிற்காக விளைாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘நான் அனைத்து டுவிட்டர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். குடியுரிமை சம்பந்தான நடைமுறைகளை உள்துறை அமைச்சகம்தான் பார்த்து வருகிறது’’ என்று டுவிட் செய்திருந்தார். பின்னர் இந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
    அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

    இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

    இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-


    இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.


    எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 சீசன் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு முறை சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது. 

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி முதல் பிளே-ஆப் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது ஏழாவது முறையகும். இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள இறுதிப் போட்டிகள் குறித்து காணலாம்:

    முதல் சீசன் (2008):

    2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

    அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னே பவுண்டரி அடித்து  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.


     2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்

    2009-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


    மூன்றாவது சீசன் (2010):

    மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.

    சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சென்னை அணி, மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


    2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

    நான்காவது சீசன் (2011):

    4-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. 


    2011 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐந்தாவது சீசன் (2012):

    5-வது சீசன் தொடரில் லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை நான்காவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும். 

    பிளே-ஆப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. பிளே-ஆப் குவாலிபையர்-2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

    இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பவுண்டரிகளை அடித்து  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.


    2012 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஆறாவது சீசன் (2013):

    இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

    முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம்  சென்னை அணி தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது.


    2013 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

    2014-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


    எட்டாவது சீசன் (2015):

    இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.


    2015 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

    அடுத்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், சென்னை அணி பங்குபெறவில்லை.


    11-வது சீசன் (2018):

    இதையடுத்து இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    முதல் பிளே-ஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.



    கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏற்கனவே மூன்று முறை தோற்கடித்துள்ளது. இதற்கு ஐதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது நாளை தெரிந்துவிடும். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை காண வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.



    மும்பை:

    ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடர் நிறைவுற இருக்கும் நிலையில், இறுதி போட்டியை காண ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்கிய போது ரிலையன்ஸ் ஜியோ ரூ.251 விலையில் புதிய சலுகையை அறிவித்திருந்தது.

    51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே மாதத்தில் ரூ.251 சலுகையை ஊக்குவிக்கும் நோக்கில் கிரிக்கெட் டீசர் திட்டத்தை அறிவித்து, 8 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகிறது. இந்நிலையில், தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் இதே போன்ற சலுகைகளை வழங்குகிறது.



    கோப்பு படம்

    நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய கிரிக்கெட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 2 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய ஆட்-ஆன் சலுகை குறுகிய கால சலுகையா என்பது குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. 

    குறிப்பாக, புதிய சலுகை வழங்கப்படிருப்பதை மைஜியோ செயலியின் மைபிளான்ஸ் பகுதியில் சென்று பார்க்க முடியும். ரூ.101 மதிப்புள்ள புதிய ஆட்-ஆன் சலுகை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆட்-ஆன் சலுகை என்பதால் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் எதுவும் வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.251 சலுகை 2018 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் இந்த டேட்டாவை கொண்டு எவ்வித வீடியோ மற்றும் இதர சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதே சலுகை புதிய ஆட்-ஆன் சலுகைக்கும் பொருந்தும்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. சகா, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. கலீல் அஹமது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சுனில் நரைன், 2. கிறிஸ் லின், 3. ராபின் உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. அந்த்ரே ரஸல், 8. பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. ஷிவம் மவி.
    ×