search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet"

    உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay




    தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.

    இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

    ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.

    மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

     - உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.

    - உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.

    - உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.

    - வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

    - 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.

    - ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.
     

    கோப்பு படம்

    - சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.

    - உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    - ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    - ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.

    - ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.

    - 2018-ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 
    கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழகத்தில் நெட்வொர்க் பரப்பளவை அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கேரளா மற்றும் மும்பையை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் நெட்வொர்க் பரப்பளவை அதிகப்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில் தமிழகம் முழுக்க 2018-2019 நிதியாண்டு வாக்கில் 12,000 புதிய மொபைல் சைட்கள், ஒவ்வொரு தினமும் 32 புதிய மொபைல் சைட்களை கட்டமைக்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஏர்டெல் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 52,000 ஆக அதிகரிக்கும்.

    ஏர்டெல் நிறுவனத்தின் பிராஜக்ட் லீப் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதே திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3,000 கிலோமீட்டர் பரப்பளவில் புதிய ஆப்டிக் ஃபைபர்களை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்க ஆப்டிக் ஃபைபர் பரப்பளவு 17,000 கிலோமீட்டர்களாக அதிகரிக்க இருக்கிறது.

    தமிழகத்தில் 4ஜி சேவைகளை துவங்கிய முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. இத்துடன் மாநிலத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் துவங்கி கிராம பகுதிகள், நெடுஞ்சாலைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் அதிவேக மொபைல் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ ஏர்டெல் கட்டமைத்திருக்கிறது.

    தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் சேவையை இதுவரை சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


    'ப்ராஜக்ட் லீக் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக சேவை வழங்க ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, எதிர்காலத் தேவைக்கு ஏற்ற இணைய கட்டமைப்புகளை உருவாக்க தொடர்ந்து முதலீடு செய்வோம்." என தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்துக்கான ஏர்டெல்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. மனோஜ் முரளி தெரிவித்தார். 
    மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று சிவகங்கை மாவட்ட கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர www.tnhealth.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் வழங்கி கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா கூறுகையில், கடந்தாண்டு அரசு ஒதுக்கிடு 750 விண்ணப்பங்கள். 250 நிர்வாக விண்ணப்பங்களை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன.

    இந்தாண்டு 1600 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு 1100-ம், நிர்வாக ஒதுக்கீட்டில் 500-ம் வந்துள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக வேலை நேரங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் வங்கி காசோலை பெற மருத்துவ கல்லூரி வளாகத்தில் வங்கியின் சிறப்பு தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு காற்றில் மிதக்கும் பலூன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    டேராடூன்:

    நாடுமுழுவதும் செல்போன் இன்டர்நெட் சேவைகளை பெறுவதற்காக நகர்ப் பகுதிகள் ஆங்காங்கே செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படுகிறது.

    தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் செல்போன் டவர்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். மேலும் செல்போன் இன்டர்நெட் இணைப்புகள் சரிவர கிடைப்பது இல்லை.

    இது போன்ற பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி. காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன்-இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு இதன் மூலம் செல்போன் இன்டர்நெட் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலாவது ஏர்பலூன் இன்டர்நெட் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    இதற்கு ரூ.50 லட்சம் செலவாகும். இது ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையில் இருந்து ரிமோட் மூலம் இயங்கக்கூடியது. அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். 7.5 கி.மீ. சுற்றளவுக்கு இணைப்புகள் கிடைக்கும்.

    இந்த சுற்றளவுக்குள் இருப்பவர்கள் பாஸ்வேர்டு இல்லாமலேயே வைபை மூலம் இணைப்பு பெறலாம். தொடக்கத்தில் இன்டர்நெட் இணைப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    உத்தரகாண்ட்டில் இமயமலைப் பகுதியில் உள்ள 16,870 கிராமங்களில் 680 கிராமங்களுக்கு இந்த பறக்கும் பலூன் மூலம் இன்டர்நெட்-செல்போன் இணைப்புகள் வழங்கப்படும்.

    இது தொலைதூர பகுதிகளுக்கு இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கு உதவவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்-மந்திரி ரவத் தெரிவித்தார். #Tamilnews
    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.99 முதல் துவங்குகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய பிராட்பேன்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி டேட்டாவில் துவங்கி, 20Mbps வேகத்தில் கிடைக்கும் சலுகைகள் விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு, முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.99 விலையில் துவங்கும் புதிய சலுகைகள் அதிகபட்சம் ரூ.399 வரை கிடைக்கிறது. இவற்றில் மாதம் 45 ஜிபி-இல் துவங்கி அதிகபட்சம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் 100Mbps வேகத்தில் மாதம் ரூ.1000-குள் கட்டணம் கொண்டிருக்கும் என்றும், ஜியோ டிவி சேவைகள் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    BBG ULD காம்போ என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவைகளில் நாடு முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    பி்எஸ்என்எல் BBG காம்போ ULD துவக்க சலுகைகள் 45 ஜிபி டேட்டா என தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவு அனைத்து சலுகைகளுக்கும் பொருந்தும். பிஎஸ்என்எல் BBG காம்போ ULD 150 ஜிபி சலுகை ரூ.199 விலையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    இறுதியில் BBG காம்போ ULD 300 ஜிபி மற்றும் 600 ஜிபி டேட்டா முறையே ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் தினமும் முறையே 10 ஜிபி மற்றும் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 20Mbps வேகத்திலும் டேட்டா வழங்கப்படுகிறது, டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா வேகம் ஒவ்வொரு நாளும் அதிகாலை 12.00 மணிக்கு ரீஸ்டோர் செய்யப்படும்.  

    புதிய பிஎஸ்என்எல் சலுகைகளுடன் இலவச மின்னஞ்சல், 1 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. விளம்பர சலுகை என்பதால் 90 நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும், ஆறு மாதத்திற்கு பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. 

    பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் மற்றும் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக வாய்ஸ் கால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் பயனர்களுக்கு கூடுதலாக வாய்ஸ் கால் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் அல்லது பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

    சில சலுகைகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்கு மட்டும் அழைப்புகள் வழங்கப்படும் நிலையில், சில சலுகைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையானது ஜியோ ஃபைபர் திட்டத்துக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சலுகையின் மதிப்பு மற்றும் ரீசார்ஜ் சலுகைகளை வைத்து பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் சேவைகள் மாறுபடும். ரூ.249 முதல் ரூ.645 விலையிலான சலுகைகளை தேர்வு செய்வோருக்கு பிஎஸ்என்எல் எண்களுக்கு அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் இந்த சலுகைகள் இரவு நேரத்தில் இலவச அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகின்றன. ரூ.645 மற்றும் இதற்கும் அதிக தொகை மதிப்புள்ள சலுகைகளை தேர்வு செய்வோர் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகையின் டேட்டா அளவு இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் மூன்று ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளை பிஎஸ்என்எல் மாற்றியமைத்தது. ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 சலுகைகளில் கூடுதலாக அதிகபட்சம் 200 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்பட்டது. இத்துடன் ஞாயிற்று கிழமைகளில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் நீட்டிக்கப்பட்டன.

    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஃபிக்சட்-லைன் பிராட்பேன்ட் சேவைகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டியை எதிர்கொள்ள முன்கூட்டியே தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. முதற்கட்டமாக ஜியோ ஃபைபர் சலுகைகளில் 1100 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் 100 ஜிபி இலவச டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறகளில் அதிவேக வைபை வழங்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கின்றன.
    கலிஃபோர்னியா:

    உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது. 

    ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    டெராகிராஃப் ப்ரோடோடைப்

    அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


    டெராகிராஃப் நெட்வொர்க்

    புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 

    எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.

    புகைப்படங்கள்: நன்றி ஃபேஸ்புக், பிக்சாபே
    கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,

    வழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.

    வழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.

    வழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்

    வழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.

    ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.
    ×