search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet"

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழக்கத்தை விட பத்து மடங்கு அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Jio



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் மற்ற நிறுவனங்களை விட சுமார் பத்து மடங்கு அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 

    ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் ஒரு சதவிகிதம் அதிகரித்து தற்சமயம் 117.93 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115.7 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி அதிகரித்துள்ளது.

    ஜியோ மட்டும் பத்து மடங்கு வாடிக்கையாளர்களை அதிகளவு சேர்த்து இருக்கும் நிலையில், மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11.53 லட்சம் வாடிக்கையாளர்களையே சேர்த்து இருக்கின்றன.

    வோடபோன் நிறுவனம் 6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் 3.13 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.25 லட்சம் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 5,489 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

    பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களை பொருத்த வரை ஜூன் மாதத்தில் இருந்து 1.3 கோடி வாடிக்கையாளர்கள் அதிகரித்து ஜூலை மாதத்தில் 46 கோடியாக உள்ளது, மொபைல் பிராட்பேன்ட் இணைப்புகள் மட்டும் 44.1 கோடியாக இருக்கிறது. 
    இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking



    இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.



    மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

    இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

    புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய பெண்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.
    இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என எல்லோருடைய பொன்னான நேரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது இணைய தளம் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தான்.

    அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.

    அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

    இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!

    தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.

    பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.

    8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.

    இணையதளத்தில் வரும் பதிவுகளில் 90 சதவீதம் அபத்தம். இந்த அபத்தங்களை உண்மை என்று நம்பி அதை ஆதரித்து பதிவிடுபவர்கள் 50 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.



    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.

    இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.

    ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.

    தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.

    முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.

    இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.

    அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!

    எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்

    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சேவை ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் பி.எஸ்.என்.எல். ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சலுகைகள் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுவதாக கூறப்படுகிறது.

    இரண்டு சலுகைகளும் பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. ரூ.777 விலையில் 30 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.1,277 சலுகையில் பயனர்களுக்கு 750 ஜிபி டேட்டா 100 Mbps வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இரண்டு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 2Mbps ஆக குறைக்கப்படும். புதிய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சேவையை பயன்படுத்துவோர் இரண்டு சலுகைகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ரூ.777 சலுகையை ஒரு வருடத்திற்கு ரூ.8,547 விலையிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.16,317 விலையில் வழங்கப்படுகிறது. இதே சலுகையை மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த விரும்புவோர் ரூ.23,310 செலுத்தலாம். ரூ.1,277 சலுகையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்த ரூ.13,047, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.26,817 மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.38,310 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.241 சலுகையை மாற்றியமைத்தது. அதன் பின் இந்த சலுகையில் 75 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவு நாடு முழுக்க அமோக வரவேற்பு பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JioGigafiber



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு முக்கிய சந்தைகளில் இறுதிகட்ட இணைப்புகளுக்கான பணிகளுக்கு உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்களிடம் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ சேவை துவங்கியதும், ஜியோ உடனான போட்டியை சமாளிக்க உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் அச்சம் கொள்வதே இந்த பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது.



    கேபிள் ஆப்பரேட்டர்களுடனான பிரச்சனையை தீர்க்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    “இறுதிகட்ட இணைப்புகளில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், மேலும் முன்பதிவுக்கு வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தையில் சரியான நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்வோம்,” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் “நாடு முழுக்க சுமார் 900 நகரங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.

    ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் வெற்றி இறுதிகட்ட கனெக்டிவிட்டி சார்ந்தது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிகாஃபைபர் வணிக ரீதியில் துவங்க ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இணைப்பு வழங்க வேண்டியிருக்கும், அந்த வகையில் இது மொபைல் சேவைகளை டவர்கள் மூலம் வழங்குவதை விட கடினமானதாகும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 3500 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. #BSNL #offers



    பி.எஸ்.என்.எல். நிறுவன ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி, பி.எஸ்.என்.எல். பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை தேர்வு செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.

    ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60Mbps ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50Mbps டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70Mbps டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6Mbps ஆக குறைக்கப்படுகிறது.

    மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100Mbps வேகம் மற்றும் 2250 ஜிபி டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100Mbps டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100Mbps வேகத்தில் 3000 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. #BSNL #offers
    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Airtel #offer



    ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட், வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன் பின் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை தொடர்ந்து பயன்படுத்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது ஹோம் பிராட்பேன்ட் சேவக்கான கட்டணத்திலேயே இணைத்துக் கொண்டு செலுத்த முடியும். தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இலவச சேவை வழங்கப்படுகிறது.

    இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படாத பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை ஏர்டெல் செயலிகள் மூலம் சைன்-இன் செய்து தங்களது சந்தாவுக்கான கட்டணத்தை ஏர்டெல் கட்டணத்துடன் இணைத்து செலுத்த முடியும். இலவச சேவை வழங்கப்பட்டுள்ள பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு தைன்-அப் செய்து மூன்று மாத சேவையை ஏர்டெல் டிவி ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.

    புதிய சலுகையில் தேர்வு செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் பயனர்களுக்கு வரும் வாரங்களில் தகவல் 
    தெரிவிக்கப்படும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை விளம்பரப்படுத்தி ஏர்டெல் டிவி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் தரவுகளை கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளன.

    அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் தரவுகள் பிரத்யேகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.
    பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2018-ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வருகிற 30-ந் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

    இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணைய தளத்தில் (http.//tnvelaivaaippu.gov.in ) ஆன்லைனில் பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்துக்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர் சேவைகள் துவங்கப்பட்டது. இதற்கென பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. #BSNL #telecom



    ஆட்பே மொபைல் பேமென்ட் இந்தியா மற்றும் ப்ளின்ட்ரான் இந்தியா என இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவன விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் தங்களது சிஸ்டம்களை பி.எஸ்.என்.எல். மொபைல் உள்கட்டமைப்புகளில் இணைத்து பயனர்களுக்கு சேவையை வழங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்பே நிறுவனம் ஏரோவாய்ஸ் என்ற பிரான்டு பெயரில் இயங்குகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க முடியும். அந்த வகையில் ஏரோவாய்ஸ் சிம் (வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை மட்டும்) மற்றும் ஐ.எஸ்.பி. (இன்டர்நெட் சேவை) சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ப்ளின்ட்ரான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சேவைகளை eSIM4Things என்ற பிரான்டு மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் E&Y நிறுவனத்துடன் இணைந்து ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷனை அறிவித்துள்ளது.

    இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணிகளை குறைந்த கட்டணத்தில் மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க வழி செய்யலாம் என கூறப்படுகிறது.

    மே 2016-இல் மத்திய டெலிகாம் துறை வெளியிட்ட விதிமுறைகளின் கீழ் விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்கியிருக்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான். அந்த வகையில் புதிய விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்குவதில் பி.எஸ்.என்.எல். மகிழ்ச்சியடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #BSNL #telecom
    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், சேவையின் விலை மற்றும் முழு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை அறிவித்து, 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகாஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.



    ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில், மாதம் 100 ஜிபி டேட்டாவினை, அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூருவில் மாதம் 50 ஜிபி டேட்டாவை 40Mbps வேகத்தில் ரூ.799 விலையில் வழங்குகிறது. இந்நிலையில், ஜியோவின் ரூ.700-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் சேவைகள் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்தது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
    குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

    குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிப்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

    பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

    குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.



    கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

    இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க "பாஸ்வேர்ட்" உதவும்.

    வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் "சைபர் கஃபே"களுக்கு செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதைவிட கண்காணிப்பது சிறந்தது.

    குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.
    ×