search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்என்எல்"

    • ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    * ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொலைதொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

    * நகரும் 2 செல்போன் டவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டன.

    * ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    • வெள்ளம் காரணமாக பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
    • செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்ளில் பெய்த அதிக கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டன.

    சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை பாதிப்பு காரணமாக செல்போன் டவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

     


    இதன் காரணமாக தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஏரல், காயல்பட்டினம் பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொலைபேசி சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெருமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். சேவை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 60 சதவீத பி.எஸ்.என்.எல். சேவை செயல்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
    • அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

     


    அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ் சலுகைகளில் மட்டும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீபாவளியை கொண்டாடும் வகையில், பயனர்களுக்கு சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 251 ரிசார்ஜ் வவுச்சரில் பி.எஸ்.என்.எல். கூடுதல் டேட்டா வழங்குகிறது. இதுதவிர மற்ற ரிசார்ஜ் சலுகைகளிலும் கூடுதல் டேட்டா வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி பயனர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 251, ரூ. 299 மற்றும் ரூ. 398 போன்ற ரிசார்ஜ் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது.

     

    பி.எஸ்.என்.எல். ரூ. 251 ரிசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 3 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள 70 ஜி.பி. டேட்டா தீர்ந்த பிறகு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வேலிடிட்டி முடிந்த பிறகு, கூடுதல் டேட்டா காலாவதியாகிவிடும். ரூ. 299 ரிசார்ஜ் செய்வோருக்கும் 3 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதனை பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி மூலம் அன்லாக் செய்துகொள்ளலாம். பி.எஸ்.என்.எல். ரூ. 299 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதேபோன்று பி.எஸ்.என்.எல். ரூ. 398 வவுச்சரிலும் கூடுதலாக 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், வேலிடிட்டி முடியும் வரை 120 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். பி.எஸ்.என்.எல். செல்ஃப்-கேர் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

    • சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.
    • கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். வலைதள பராமரிப்பு பணிகள் இன்று மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை குடிநீர் வாரிய தொலைபேசி எண் 044-2845 1300, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1916 மற்றும் 14420 செயல்படாது.

    மேலும் மற்ற இணையதள சேவைகள் மற்றும் தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும். கூடுதல் விவரங்களுக்கு 4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் வாய்ஸ் காலிங் சேவையை வழங்கும் புதிய சலுகையை அறிவித்தது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை மொத்தத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் பிரீபெயிட் சலுகைகள் வெவ்வேறு பலன்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    இந்த சலுகை பயனர்களுக்கு வாய்ஸ் கால் சேவையை மட்டும் 90 நாட்களுக்கு வழங்குகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகை விலை ரூ. 439 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகிறது.

     

    முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பிஎஸ்என்எல் ரூ. 439 சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சலுகையின் மூலம் பயனர்கள் மாதத்திற்கு ரூ. 146 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவையை பெறலாம். இதன் மூலம் தினமும் ரூ. 4.80 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒருவேளை நீண்ட கால வேலிடிட்டி வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் சலுகையை வழங்கி வருகிறது. இதில் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் பலன்கள், 600 ஜிபி அதிவேக டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும். 

    • பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிகபட்சம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை தேர்வு செய்ய விரும்புவோருக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பிஎஸ்என்எல் புதிய பிரீபெயிட் சலுகையின் விலை ரூ. 197 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இதில் 18 நாட்களுக்கு இலவச பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது டெலிகாம் துறையில் சலுகை விலை மற்றும் பலன் விவரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகையின் பழைய பலன்கள் மாற்றப்பட்டுவிட்டது.

    அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 197 பிரீபெயிட் சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா (தினமும் 2 ஜிபி), 100 எஸ்எம்எஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. பலன்களை பொருத்தவரை இந்த சலுகை தினசரி கட்டணம் ரூ. 2.80 என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இலவச பலன்களின் வேலிடிட்டி 15 நாட்கள் மட்டுமே ஆகும். அதன் பின் இவற்றை பயன்படுத்த கட்டணங்கள் வசூலிக்கப்படும். புதிய பிஎஸ்என்எல் ரூ. 197 சலுகை பெரும்பாலான டெலிகாம் வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், சில வட்டாரங்களில் இது வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு குறைந்த விலை சலுகையை வழங்கு வருகிறது.
    • குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை தினமும் 1 ஜிபி டேட்டா, வாய்ஸ் காலிங் போன்ற பலன்களை வழங்குகிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 87 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் பிஎஸ்என்எல் உள்பட அனைத்து நிறுவனங்களும் தங்களின் சலுகை விலையை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் அனைத்து வட்டாரங்களிலும் தனது எண்ட்ரி லெவல் சலுகை விலையை ரூ. 155 ஆக உயர்த்திவிட்டது.

    அந்த வகையில் புதிய ரூ. 87 சலுகை பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கால வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை வாய்ஸ் கால் மற்றும் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகை வழங்கப்பட்டு வருவதால், பலரும் இதனை ஏற்கனவே பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

     

    பிஎஸ்என்எல் ரூ. 87 பலன்கள்:

    பிஎஸ்என்எல் ரூ. 87 சலுகை மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஹார்டி மொபைல் கேம்ஸ்-இன் கேமிங் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த சலுகை மொத்தத்தில் பயனர்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்குகிறது.

    தினமும் 1 ஜிபி டேட்டா போதாத என்ற வகையில், பயனர்கள் ரூ. 97 விலை சலுகையை தேர்வு செய்யலாம். இந்த சலுகையிலும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் பலன்கள் வழங்கப்படவில்லை. எனினும், இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இது தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்கள் மொத்தத்தில் 30 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் 4ஜி சேவையை வெளியிடும் பணிகளில் பிஎஸ்என்எல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் தனது சலுகை பலன்களை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 71, ரூ. 104, ரூ. 135 மற்றும் ரூ. 395 விலை சலுகைகளை நீக்கி இருக்கிறது. அதிக பிரபலமாக இல்லாதது மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் நான்கு சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளன.

    நீக்கப்பட்ட சலுகைகளுக்கு மாற்றாக புதிய திட்டங்களை விரைவில் பிஎஸ்என்எல் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் 4ஜி சேவையை இந்த ஆண்டும், 5ஜி சேவையை அடுத்த ஆண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு செய்வது சிறப்பானதாக இருக்கும்.

     

    பிஎஸ்என்எல் ரூ. 269 மற்றும் ரூ. 768 சலுகை விவரங்கள்:

    பிஎஸ்என்எல் புதிய ரூ. 269 மற்றும் ரூ. 769 சலுகைகள் ஃபெஸ்டிவல் தமாகா ஆஃபரின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிஎஸ்என்எல் ரூ. 269 சலுகையில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன்ஸ், சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    பிஎஸ்என்எல் ரூ. 769 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், லாக்துன் செயலிக்கான சந்தா, சிங் ஆப் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த சலகையின் வேலிடிட்டு 90 நாட்கள் ஆகும்.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • 4ஜி சேவைகளை வெளியிட டிசிஎஸ் உடன் இணைந்து உள்நாட்டு உபகரணங்களை பிஎஸ்என்எல் பயன்படுத்த இருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் இணைந்து நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎஸ் உபரணங்களை பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்த இருக்கிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை. தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டுக்கு மேலும் சில காலம் ஆகும்.

    டிசிஎஸ் உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கொள்முதல் ஆணை வழங்குவதற்கு மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பிஎஸ்என்எல் நிர்வாக குழுவின் முடிவு குறித்து மத்திய தொலைதொடர்பு துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மத்திய டெலிகாம் துறை சார்பில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை மார்ச் மாத வாக்கில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் வழங்க இருக்கிறது. இதற்கான மொத்த தொகை ரூ. 24 ஆயிரத்து 556.37 கோடி ஆகும்.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகளை பத்து ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும். இதற்காக டிசிஎல் சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை வழங்குகிறது. இதில் சில மூன்றாம் தரப்பு பொருட்களும் இடம்பெற்று இருக்கும். 

    • பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியா முழுக்க 5ஜி சேவைகளை வேகமாக வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் 5ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட துவங்கின. இரு நிறுவனங்களும் 5ஜி வெளியீட்டில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    எனினும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என பலமுறை தகவல்களை வெளியாகின. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலேயே பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என தெரிகிறது.

    தற்போதைய நிதியாண்டின் இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு நடைபெற மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து டெல்டிங்கை நடத்தி முடித்தது.

    பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு சார்பில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மெட்ரோ பகுதிகளில் 4ஜி நெட்வொர்க்-ஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஎன்எல் நிறுவனம் தற்போதைய இணைப்புகளிலேயே கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 4ஜி வெளியீடு தாமதமாகி இருப்பதை அடுத்து பிஎஸ்என்எல் 5ஜி சேவை வெளியீடு மேலும் தாமதமாகும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார்.
    • 5ஜி சேவை துவக்க நிகழ்வில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போது வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் நாடு முழுக்க சுமார் 70-க்கும் அதிக நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் "பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

    ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவங்கி வைத்த மத்திய மந்திரி நாட்டில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு பற்றிய கருத்துக்களை தெரிவித்தார். பிஎஸ்என்எல் தற்போது பயன்படுத்தி வரும் உள்கட்டமைப்புகளை கொண்டு 4ஜி-யில் இருந்து வேகமாக 5ஜி-க்கு அப்கிரேடு செய்து கொள்ள முடியும். மாநிலம் முழுக்க 4ஜி சேவைகளை வழங்குவதற்காக 100 டெலிகாம் டவர்கள் 100 கிராமங்களில் இன்ஸ்டால் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் ஆகஸ்ட் 2023 வாக்கில் வெளியாகும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருந்தார். 2023 ஜனவரி மாதம் 4ஜி சேவைகள் வழங்கும் பணி துவங்கும். பின் ஆகஸ்ட் 2023 வாக்கில் 5ஜி வெளியீடு படிப்படியாக துவங்கும் என அவர் தெரிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களின் படி முந்தைய திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பாதக தெரியவந்துள்ளது.

    ×