search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvSA"

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.

    வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.

    நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • மழையால் தென்ஆப்பிரிக்காவுக்கு 15 ஓவரில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

    ரிங்கு சிங் 39 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கோயட்சி 3 விக்கெட்டும், மார்கோ ஜான்சென், லிசாட் வில்லியம்ஸ், ஷம்சி, மார்க்கிராம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மழையால் அந்த அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா 7 பந்து எஞ்சியிருந்த நிலையில் இந்த இலக்கை எடுத்தது. அந்த அணி 13.5 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹென்ரிக்ஸ் 27 பந்தில் 49 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மார்க்கிராம் 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். முகேஷ் குமார் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    வெற்றி பெறுவதற்கு இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதல் 5 முதல் 6 ஓவர்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து விட்டனர். போட்டியின் முடிவையும் எங்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டனர். இது போன்று கிரிக்கெட்டில் நடப்பது சகஜம்தான்.

    மழை குறுக்கிட்டதால் பந்து முழுவதுமாக ஈரமானது. இதனால் பந்து வீசுவதற்கு மிகவும் சவாலாக இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை நாங்கள் ஒரு பாடமாகவே பார்க்கிறோம்.

    மைதானத்தில் என்ன நடந்தாலும் அதை இங்கேயே விட்டு செல்லுங்கள் என்று வீரர்களிடம் தெரிவித்தேன். 3-வது போட்டிக்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

    • தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
    • ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருக்கிறது.

    விராட் கோலி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியதாவது:-

    விராட் கோலி தென்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொடரை விளையாட விரும்புவார் என நம்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி சிறந்த தொடராக அமைய வேண்டும். விராட் கோலி சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்த்துள்ளார்.

    அவர் மற்ற வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் நபர். தென்ஆப்பிரிக்கா சீதோஷண நிலையை மற்றும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இளம் வீரர்களுக்கு யோசனை வழங்கக் கூடியவர்.

     தற்போதுள்ள இந்திய அணி சிறந்தது. என்றபோதிலும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.

    செஞ்சூரியன் தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். கேப் டவுன் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இது சிறந்த தொடராக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்" என்றார்.

    கடந்த ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்சில் 932 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

    இந்தத் தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒயிட்-பால் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 3 சதங்கள் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இருந்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாததால் மிகுந்த கவலை அடைந்தார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    • கடைசி மூன்று ரன்களின் விராட் கோலியின் சுயநலம் இருந்தது- முகமது ஹபீஸ்.
    • ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது- வெங்கடேஷ் பிரசாத்.

    இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி இதுவரை 543 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளது. அவரது ஸ்கோரில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

    நேற்று முன்தினம் கொல்கத்தாவில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி தனது 49-வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.

    இதற்கிடையே விராட் கோலி சுயநலமாக விளையாடினார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன். இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49-வது ஓவரில், அவர் சதத்தை எட்டுவதற்கு ஒரு ரன் எடுக்க விரும்பினார், அவர் அணிக்கு முதலிடம் கொடுக்கவில்லை.

    கோலி நன்றாக விளையாடவில்லை என்று நான் கூறவில்லை, அவர் 97 ரன்களை எட்டும் வரை அவர் அழகாக பேட்டிங் செய்தார். அவர் எடுத்த கடைசி மூன்று சிங்கிள்களின் நோக்கத்தைப் பற்றி பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிக்காமல் ஒரு ரன்னாக எடுத்தார். எப்போதும் தனிப்பட்ட மைல்கல்லுக்கு மேல் அணிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றார்.

    இந்த நிலையில் கோலி மீதான விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

    விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக பேசப்படும் விவாதங்களை கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆம் விராட் கோலி சுயநலவாதியே. ஒரு பில்லியன் மக்களின் கனவை பின்பற்றும் சுயநலம் அவரிடம் உள்ளது. இவ்வளவு சாதித்த பின்பும் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வதில் சுயநலமாக இருக்கிறார். ஆம் விராட் கோலி சுயநலவாதியே" என்று பதிவிட்டுள்ளார்.

    • கிடைத்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    • கேட்சுகளை தவற விட்டதற்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர்.  


    நாங்கள் ஃபீல்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் கேட்ச்களை நழுவ விட்டோம் என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம்.

    எனினும் நேற்றைய போட்டியில் எங்களது ஃபீல்டிங் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்தோம். ஆனால் நேற்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 


    எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்றைய போட்டியிலும் கோலி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு
    • கோலியை எதிர்கொள்ள காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. உலகின் அதிவேக வேகப்பந்து வீச்சிற்கான ஆடுகளம் என்று இந்த மைதானம் அழைக்கப்படுகிறது.

    இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த விராட் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் கோலியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடாவும், அன்ட்ரிச் நார்ஜே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • டி 20 உலக கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

    பெர்த்:

    டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரண்டு அணிகளும் தங்களது 3-வது போட்டியில் நாளை பெர்த்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து ஆடுகளம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.

    இந்நிலையில், நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நோர்ஜே கூறியதாவது:

    நாங்கள் எங்களை நம்புகிறோம். உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளில் நாங்களும் ஒன்று. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து செல்வோம். நாங்கள் விதவிதமான வகையில் பந்து வீசும் வீரர்களைக் கொண்டுள்ளோம். நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி. எங்களுடைய வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு இடங்களை சரிசெய்வோம்.

    வேகப்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நாங்கள் எங்களுடைய திறமையைின் மீது நம்பிக்கை வைத்து செல்வோம். எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் நாளில் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்போம்.

    அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம்.

    பெர்த் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளை வைத்து பார்க்கும்போது, சிறந்த ஆடுகளமாக தெரிகிறது. அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ளது. நாளைய போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து உறுதியாக கூற இயலாது. சற்று மாறுபட்டு காணப்படலாம் என தெரிவித்தார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் நோர்ஜே 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
    • இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    ராஜ்கோட்:

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித்தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2- வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3- வது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை ( 17-ந் தேதி ) நடக்கிறது.

    முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்திய அணியின் வெற்றி நாளைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய வீரர்களுக்கு உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார். இதேபோல சுழற்பந்து வீரர்கள் யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் இயல்பான நிலைக்கு திரும்பினார்கள்.

    கடந்த 3 ஆட்டத்திலும் வீரர்கள் தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநிலை நாளைய ஆட்டத்திலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி நாளைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பாக ஆட முயற்சிக்கும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    • இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
    • இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.

    கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.

    ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    ×