search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallis"

    • தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
    • ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருக்கிறது.

    விராட் கோலி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியதாவது:-

    விராட் கோலி தென்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொடரை விளையாட விரும்புவார் என நம்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி சிறந்த தொடராக அமைய வேண்டும். விராட் கோலி சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்த்துள்ளார்.

    அவர் மற்ற வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் நபர். தென்ஆப்பிரிக்கா சீதோஷண நிலையை மற்றும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இளம் வீரர்களுக்கு யோசனை வழங்கக் கூடியவர்.

     தற்போதுள்ள இந்திய அணி சிறந்தது. என்றபோதிலும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.

    செஞ்சூரியன் தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். கேப் டவுன் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இது சிறந்த தொடராக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்" என்றார்.

    கடந்த ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்சில் 932 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான தலைவிதி எங்கள் கையில்தான் உள்ளது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கையில்தான் உள்ளது என கல்லீஸ் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR #Kallis
    ஐபிஎல் 11-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மற்ற இரண்டு அணிகள் எது என்பதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    ஐந்து அணிகளும் தலா இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவிதி அந்த அணியிடம்தான் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ஜேக்யூஸ் கல்லீஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கல்லீஸ் கூறுகையில் ‘‘எங்களுடைய தலைவிதி இன்னும் எங்கள் கையில்தான் உள்ளது. நாங்கள் இன்னும் இரண்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றால், எங்களால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    நாங்கள் தற்போது இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துகிறோம். இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மற்ற அணிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை குறித்து நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை’’ என்றார்.
    ×