search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிஸ்"

    • தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.
    • ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்.

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3-ந்தேதியும் தொடங்க இருக்கிறது.

    விராட் கோலி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியதாவது:-

    விராட் கோலி தென்ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொடரை விளையாட விரும்புவார் என நம்புகிறேன். அவர் சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகிப்பார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி சிறந்த தொடராக அமைய வேண்டும். விராட் கோலி சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட அளவு ரன்கள் சேர்த்துள்ளார்.

    அவர் மற்ற வீரர்களுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் நபர். தென்ஆப்பிரிக்கா சீதோஷண நிலையை மற்றும் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இளம் வீரர்களுக்கு யோசனை வழங்கக் கூடியவர்.

     தற்போதுள்ள இந்திய அணி சிறந்தது. என்றபோதிலும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம்.

    செஞ்சூரியன் தென்ஆப்பிரிக்கா அணிக்கு சாதகமாக இருக்கும். கேப் டவுன் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இது சிறந்த தொடராக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு செசன்களில் சிறப்பாக விளையாடும் அணி ஒன்றைவிட ஒன்று சிறந்ததாக திகழும்" என்றார்.

    கடந்த ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்சில் 932 ரன்கள் எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும்.

    செஞ்சூரியன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் வருகிற 10-ந் தேதி டர்பனில் நடக்கிறது.

    ஒருநாள் போட்டி 17-ந் தேதியும், டெஸ்ட் தொடர் 26-ந் தேதியும் தொடங்குகிறது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் காலிஸ் கூறியதாவது:-

    இந்திய அணி ஒரு நல்ல அணி. ஆனால் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமானது. முதல் டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கும், 2-வது டெஸ்ட் நடக்கும் நியூலேண்ட்ஸ் இந்தியாவுக்கும் சாதகமாக இருக்கும். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். 

    ஒரு அணி மற்றொன்றை விட சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியின் வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கும். திறமையான வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆலோசகர்களை பெற்று தங்களை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக விளையாட முடியும்.

    மூத்த வீரர்கள், ஆட்ட நுணுக்கங்களை பெற்று இருப்பார்கள். அதை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இளம் வீரர்கள் விளையாடாவிட்டாலும், அவர்கள் மூத்த வீரர்களுடன் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் பணியாகும்.

    அறிமுகமில்லாத இடங்களுக்கு விளையாட செல்லும்போது இளம் வீரர்கள், மூத்த வீரர்களிடையே இருந்து அவர்களின் அனுபவங்களை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×