search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்கிராம்"

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.

    வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.

    நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.

    ×