search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvPAK"

    • டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது.

    மெல்போர்ன்:

    டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது. அனைத்து வடிவிலான போட்டியிலும் சேர்த்து இந்திய அணி 39 வெற்றியைப் பெற்றுள்ளது.

    டெஸ்டில் 2, ஒருநாள் ஆட்டத்தில் 13, டி20 போட்டியில் 24 என 39 வெற்றி கிடைத்துள்ளது.

    2003-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து உள்ளது.

    கடந்த 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த சாதனையை சமன் செய்திருந்தது. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சாதனை முறியடிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இந்தியாவின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    மெல்போர்ன்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். சூர்யகுமார் 15 ரன்னிலும், அக்சர் படேல் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடியது. 5-வது விக்கெட்டுக்கு சேர்ந்த இந்த ஜோடி 100 ரன்களை கடந்து அசத்தியது. விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார். பாண்ட்யா 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 20 ஓவரில் 160 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. கோலி 82 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை எடுத்துள்ளது.
    • இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தான் வீசிய முதல் பந்தில் கேப்டன் பாபர் அசாமை டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்து அர்ஷ்தீப் சிங் ரிஸ்வானை 4 ரன்னில் அவுட்டாக்கினார்.

    தொடர்ந்து இறங்கிய ஷான் மசூத்துடன், இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பொறுப்புடன் வீசிய அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
    • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

    ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

    பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு
    • இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் பாகிஸ்தான் பந்து விச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.

    எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • 8 அணிகள் கலந்துகொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.
    • சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது.

    தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளை யாடுகின்றன. முதல் சுற்று மூலம் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. 8 நாடுகள் கலந்து கொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.

    இதன் முடிவில் ஏ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்தும் , பி பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, அயர்லாந்தும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    குருப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான் , இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்றின் இன்றைய தொடக்க ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்திய அணி கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகள் இடையே யான 20 ஓவர் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 68.

    உள்நாட்டில் மட்டுமே சிறப்பாக ஆடுகிறது, வெளி நாடுகளில் கோட்டை விட்டு விடுகிறது என்ற விமர்சனம் இந்திய அணி மீது இருக்கிறது. அதை சரி செய்ய உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா சாதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். சமீப காலமாக பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதை சரி செய்வது அவசியமாகும். பும்ரா, ஜடேஜா இல்லாதது அணிக்கு பாதிப்பே.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பஹர் ஜமான் ஆகியோரும் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி திரும்பி இருப்பது அணிக்கு கூடுதல் பலமே.

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 80 முதல் 90 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
    • வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனை ஆகிவிட்டன

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    இதேபோல் வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள், இந்தியா மற்றும் குரூப் A-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம். 

    • இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது.
    • 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன்.

    ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

    இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும்.

    இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில்,விராட் கோலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப்சிங் தவற விட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 


    அதற்கு பதில் அளித்த கோலி, அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்களிடம் நீங்கள் (இளம் வீரர்கள்) கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார்.

    துபாய்:

    துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார். கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்னும் சமான் 15 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 42 ரன் அடித்தார். ஷா 14 ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் என்ற சாதனையை எட்டினார் ரோகித் சர்மா
    • நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    துபாய்:

    2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    இதேபோல் மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி 60 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ரவி பிஸ்னோய் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தார். நயீம் ஷா, முகமது உசைன், ஹரிஸ் ரவுப், முகமது நவாஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. 

    • இந்திய அணியில் தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு வாய்ப்பு

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப இந்திய அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியிருக்கிறார். தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜடேஜா, ஆவேஷ் கான், கார்த்திக் ஆகியோர் இடம்பெறவில்லை.

    • ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என தகவல்.
    • இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்ப்பு.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது.

    எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×