search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை: இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில்  பாகிஸ்தான் திரில் வெற்றி
    X

    முகமது ரிஸ்வான்

    ஆசிய கோப்பை: இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார்.

    துபாய்:

    துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார். கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்னும் சமான் 15 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 42 ரன் அடித்தார். ஷா 14 ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×