search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஹர்திக், அர்ஷ்தீப் சிங் அபாரம் - இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    3 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்

    ஹர்திக், அர்ஷ்தீப் சிங் அபாரம் - இந்தியா வெற்றி பெற 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை எடுத்துள்ளது.
    • இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தான் வீசிய முதல் பந்தில் கேப்டன் பாபர் அசாமை டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்து அர்ஷ்தீப் சிங் ரிஸ்வானை 4 ரன்னில் அவுட்டாக்கினார்.

    தொடர்ந்து இறங்கிய ஷான் மசூத்துடன், இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பொறுப்புடன் வீசிய அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    Next Story
    ×