search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் மோதல்"

    • பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு மோடி தலைமையின் கீழ் ராணுவ பதிலடிக்கு வாய்ப்பு அதிகம் என அறிக்கையில் தகவல்
    • 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடந்த காலத்தில் போல் இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது, என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    காஷ்மீரில் வன்முறை, அமைதியின்மை அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றால் பதற்றம் அதிகரித்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து உள்ளது என அறிக்கை கூறுகிறது.

    இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதில், 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது.

    அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. 

    • நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும்.
    • பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

    பின்னர் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அற்பமான, அடிப்படையற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நிராகரிக்கிறேன். இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது.

    மாறாக, நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த இன்றைய விவாதம் மிகவும் முக்கியமானது. விவாதத்தின் தலைப்பை நாங்கள் மதிக்கிறோம். எனவே, எங்கள் கவனம் இந்த தலைப்பில் மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.
    • அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க சில மணிநேரம் தேவைப்பட்டது.

    வாஷிங்டன்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அசாதார சூழலில் பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதலை நடத்துவதற்கு தயாரான தகவல் வெளியாகியிருக்கிறது.

    'ஒரு அங்குலம்கூட கொடுக்காதே: நான் விரும்பும் அமெரிக்காவுக்காக போராடுகிறேன்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. அதில், பாம்பியோ கூறியிருப்பதாவது:-

    2019 பிப்ரவரி மாதம் பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலை அடுத்து அணுகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும், இந்தியா தனது சொந்த முயற்சியில் தீவிர பதிலடி கொடுக்க தயாராகி வருவதாகவும், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் கூறினார்.

    பிப்ரவரி 27-28 தேதிகளில் அமெரிக்க-வட கொரியா உச்சிமாநாட்டிற்காக நான் ஹனோயில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சிக்கலான தருணத்தை தவிர்க்க இந்தியா- பாகிஸ்தான் இடையே இரவோடு இரவாக எங்கள் குழுவினர் பேசினர்.

    வியட்நாமின் ஹனோய் நகரில் நான் இருந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. வட கொரியர்களுடன் அணு ஆயுதங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது போதாது என்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக வடக்கு எல்லைப் பிராந்தியம் தொடர்பாக ஒருவரையொருவர் அச்சுறுத்தத் தொடங்கினர்.

    ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர். இந்தியா பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தொடர்ந்து நடந்த சண்டையில் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள், இந்திய விமானியை சிறைபிடித்தனர்.

    ஹனோயில் இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேசினேன். அப்போது, அவர் பாகிஸ்தானியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக நம்பினார். இந்தியா, அதன் சொந்த முயற்சியில் தாக்குதலை விரிவுபடுத்துவது பற்றி சிந்தித்து வருவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் 'ஒன்றும் செய்ய வேண்டாம், பிரச்சனையை சரிசெய்ய எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள்' என்று கேட்டேன்.

    நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள சிறிய பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதியில் என்னுடன் இருந்த தூதுவர் (அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்) போல்டனுடன் இணைந்து உடனடியாக பணியாற்றத் தொடங்கினேன். பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை தொடர்புகொண்டு, இந்தியா தரப்பில் என்னிடம் சொன்னதை சொன்னேன். ஆனால், அது உண்மையல்ல என்றார் அவர்.

    மேலும், இந்தியர்கள் தங்கள் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு தயாராகி வருவதாக அவர் நம்பினார். அப்போது இரு நாடுகளுக்கு மத்தியில் எங்கள் குழுக்கள் சிறப்பாக பணியாற்றினர். அணு ஆயுதப் போருக்குத் தயாராகவில்லை என்பதை இரு தரப்பையும் நம்பவைக்க எங்களுக்குச் சில மணிநேரம் தேவைப்பட்டது.

    ஒரு பயங்கரமான விளைவைத் தவிர்ப்பதற்காக, அந்த இரவில் நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது. எல்லா ராஜதந்திரத்தையும் போலவே, சிக்கலைத் தீர்க்கும் நபர்களும் மிக முக்கியமானவர்கள். இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் சிறப்பாக பணி செய்தனர். குறிப்பாக கென் ஜஸ்டர் திறமையான தூதராக இருந்தார். அவர் இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார்.

    இவ்வாறு பாம்பியோ தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

    • இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது.
    • 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன்.

    ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

    இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும்.

    இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி நீண்ட நேரம் நீடித்துவிட்டது. இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில்,விராட் கோலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப்சிங் தவற விட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 


    அதற்கு பதில் அளித்த கோலி, அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானலும் தவறு செய்யலாம். மூத்த வீரர்களிடம் நீங்கள் (இளம் வீரர்கள்) கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

    • முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார்.

    துபாய்:

    துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரிஸ்வான் 71 ரன்கள் குவித்தார். கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்னும் சமான் 15 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 42 ரன் அடித்தார். ஷா 14 ரன்களும், ஆசிப் அலி 16 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் என்ற சாதனையை எட்டினார் ரோகித் சர்மா
    • நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    துபாய்:

    2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

    இதேபோல் மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி 60 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ரவி பிஸ்னோய் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தார். நயீம் ஷா, முகமது உசைன், ஹரிஸ் ரவுப், முகமது நவாஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. 

    • இந்திய அணியில் தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு வாய்ப்பு

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக முகமது ஹஸ்னைனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப இந்திய அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியிருக்கிறார். தீபக் ஹூடா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஜடேஜா, ஆவேஷ் கான், கார்த்திக் ஆகியோர் இடம்பெறவில்லை.

    • ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என தகவல்.
    • இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்ப்பு.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது.

    எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.
    • பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் வீரர்கள் ரன்கள் எடுத்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், துபாயில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    பாகிஸ்தானுடனான இன்றைய போட்டிக்கு எங்களிடம் சிறந்த பந்து வீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லோரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க ஆர்வமாக உள்ளனர். மற்றவர்களைப் போல எங்களுக்கு இது ஒரு போட்டி மட்டுமே, நாம் வெற்றி பெற்றால் அது மிகவும் நல்லது, தோற்றால், நாங்கள் மீண்டும் முயற்சி செய்வோம். பாகிஸ்தான் நல்ல பார்மில் உள்ளது. எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை.

    பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை நன்றாகப் பந்து வீசினார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் கூட ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தானிடம் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் பார்ப்பதில்லை. எங்களின் பலம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.

    ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே, நாங்கள் அவரை அதிலிருந்து விலக்க முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். நான் அவரை விலக்க விரும்பவில்லை. விராட் முந்தைய ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். கடந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

    எங்களைப் பொறுத்தவரை, அவர் எத்தனை ரன்கள் எடுத்தார் என்பது முக்கியமல்ல. அணி உண்மையில் வெற்றிக்கு போராடும் போது ஒரு சிறிய பங்களிப்பு கூட முக்கியமானது. உலகக் கோப்பைக்கு நாங்கள் பெரிய அளவிலான வீரர்களை உருவாக்க முயற்சிக்கிறோம். நல்ல நிலையில் வீரர்கள் விளையாடும் போது 11 பேரை தேர்வு செய்வது ஒரு இனிமையான தலைவலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன.
    • ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் 20 ஓவர் கிரிக்கெட்டாக நடத்தப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா-பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இதனால் பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும். அதே வேளையில் லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    சூப்பர் 4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்திய அணி பேட்டிங்கில் விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார்.

    கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், அர்ஷ்தீப்சிங், சஹல், ஆவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். காயம் காரணமாக விலகியுள்ள ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், குஷ்தீல்ஷா, இப்திகார் அகமது ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ் ரவுப், ஷதப் கான், முகமது நவாஸ், தகானி ஆகியோர் உள்ளனர். லீக் சுற்றில் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணி கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன. ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    • சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்.
    • நாளை இந்தியா மீண்டும் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளதாவது:

    ஷார்ஜா ஆடுகளத்தில் பவர் பிளே ஆட்டத்தின்போது 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். அதனால் நாங்கள் முதலில் ஆட்டத்தின் நிலையை மதிப்பீடு செய்து பின்னர் அதற்கேற்ப விளையாடினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வுபூர்வமானது. அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும்.

    இந்தப் போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.
    • ஹர்திக் விரைவாக பந்துவீச முடியும் என்பது வெளிப்பட்டுள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    ரன்களை சேசிங் செய்யும் போது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்.

    அவர் அணியில் இல்லாத போது, ​​தனது உடற்பயிற்சி முறைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். அவரது பேட்டிங் தரம் நாம் அனைவரும் அறிந்ததே, இப்போது அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார், மட்டைவீச்சு அல்லது பந்து வீச்சில் என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    ஹர்திக் விரைவாக பந்துவீச முடியும் என்பது இன்றைய தினம் வெளிப்பட்டுள்ளது. அவரால் மிக விரைவாக பந்துவீச முடியும். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற உயர் அழுத்தத்தில், நீங்கள் பீதி அடையலாம், ஆனால் அவர் ஒருபோதும் காட்டவில்லை. போட்டி கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்திருந்தார், வெற்றி பெற்றதற்கான அனைத்து காரணங்களும் அவரையே சாரும். இவ்வாறு ரோகித் குறிப்பிட்டார்.

    ×