search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா பாகிஸ்தான் போட்டி"

    • அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன.
    • ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14-ந்தேதி நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா அல்லாத போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் அன்று விற்பனையாகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் மோதும் போட்டிக்களுக்கான டிக்கெட்டுகள் (சென்னை, டெல்லி, புனே) வருகிற 31-ந்தேதி விற்பனையாகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ந்தேதி விற்பனையாகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையாகிறது.

    டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொண்டால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலில் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க இது கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. 3 முதல் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கான முன்பதிவு புக்கிங் முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் சுமார் 180 அறைகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் ஒருநாள் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2½ லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சமாக இருக்கிறது.

    இதேபோல அகமதாபாத் செல்வதற்கான விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்து உள்ளது. அக்டோபர் 13 முதல் 15 வரை மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் பெரும்பாலான விமானங்களின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் கட்டணமாகும். உலக கோப்பை போட்டி காரணமாக 5 மடங்கு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குஜராத் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.
    • தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது.

    இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியானது.

    இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுக்கான ஆன்விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

    மேலும், பிசிசிஐ 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மேலும், இதுகுறித்து பிசிசஐ கெளரவ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், " அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது. ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசியுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக, நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி நடக்கிறது
    • அக்டோபர் 15-ம் தேதிதான் நவராத்தி விழாவும் தொடங்குகிறது

    இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    • அக்டோபர் 15-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதல்
    • 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

    ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது.

    போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

    5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

    ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

    பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாம்.

    ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிக அளவில் ரூம்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது.

    குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் ரூம்கள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும்.

    இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்'' என்றார்.

    நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் ரூம் வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

    • இங்கிலாந்து- நியூசிலாந்து போட்டியுடன் உலகக்கோப்பை தொடங்கும் என எதிர்பார்ப்பு
    • இந்தியா 9 இடங்களில் விளையாடும் வகையில் வரைவு அட்டவணை தயாரிப்பு

    இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.

    அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அகமதாபாத்தில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து நியூசிலாந்தை தொடக்க ஆட்டத்தில் எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இறுதிப் போட்டியும் அங்கே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தியா தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 9 மைதானங்களில் விளையாடும். பாகிஸ்தான் ஐந்து நகரங்களில் விளையாடும்.

    இந்த வரைவு பட்டியல் உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்த வாரம் இறுதி அட்டவணை வெளியிடப்படும்.

    அகமதாபாத்தில் விளையாட பாகிஸ்தான் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
    • வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனை ஆகிவிட்டன

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    இதேபோல் வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள், இந்தியா மற்றும் குரூப் A-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம். 

    ×