என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Impact"
- 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
- சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.
இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.
வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.
இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.
எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.
- முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர்.
- மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் காப்பக மீட்பு குழுவினர் விஜயா, சுபா, சரவணன், சங்கர், மைக்கேல் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணை தலைவர் சிவக்குமார், முத்துப்பேட்டை வர்த்தக சங்க கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பத்திரிக்கையாளர் முகைதீன் பிச்சை, வக்கீல் தீன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியோர் இணைந்து முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.
இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- நோ-பால் மற்றும் வைடு குறித்து ஆட்சேபனை இருந்தால் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யும் முறையும் கொண்டு வரப்படுகிறது.
- ஒரு வீரர் 4 ஓவர் பந்து வீசி முடித்த பிறகு அவரை வெளியேற்றி விட்டு கொண்டு வரப்படும் மாற்று வீரரும் 4 ஓவர்களை முழுமையாக வீசலாம்.
புதுடெல்லி:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. போட்டியில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க செய்யும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை இந்த ஐ.பி.எல்.-ல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன்படி 'டாஸ்' போடும் போது, ஒவ்வொரு அணியும் கொடுக்கும் களம் இறங்கும் 11 வீரர்கள் பட்டியலுடன் 4 மாற்று வீரர்களின் பெயரையும் அளிக்க வேண்டும். அந்த மாற்று வீரர்களில் இருந்து ஒருவரை ஆட்டத்தின் போது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற பெயரில் பயன்படுத்தி கொள்ளலாம். இரு இன்னிங்சில் ஏதாவது ஒன்றில் 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக மாற்று வீரரை அணி களம் இறக்கலாம். இத்தகைய மாற்று வீரர் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் ஈடுபட முடியும்.
ஐ.பி.எல்.-ல் களம் காணும் 11 வீரர்களில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே வெளிநாட்டவராக இருக்க முடியும். 4 வெளிநாட்டு வீரர்களை சேர்த்து இருக்கும் பட்சத்தில் அந்த அணி வெளிநாட்டு வீரரை மாற்று வீரராக பயன்படுத்த முடியாது. அப்போது மாற்று வீரராக இந்திய வீரரை மட்டுமே கொண்டுவர முடியும். லெவன் அணியில் வெளிநாட்டவர் 3-க்கும் குறைவாக இருந்தால் மட்டும் மாற்று வீரர் இடத்துக்கு வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியும்.
ஓவர் முடியும் போது அல்லது விக்கெட் விழும் போது அல்லது பேட்ஸ்மேன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறும் சமயத்தில் தான் மாற்று வீரரை கொண்டு வர நடுவர் 'சிக்னல்' கொடுப்பார். மாற்று வீரர் வரும் போது அவருக்கு பதிலாக வெளியேறும் வீரர், அதன் பிறகு அந்த போட்டியில் களம் இறங்க முடியாது.
ஒரு வீரர் 4 ஓவர் பந்து வீசி முடித்த பிறகு அவரை வெளியேற்றி விட்டு கொண்டு வரப்படும் மாற்று வீரரும் 4 ஓவர்களை முழுமையாக வீசலாம். இது கடைசி கட்டத்தில் அந்த அணியின் சிறப்பான பந்து வீசும் வியூகத்துக்கு பக்கபலமாக இருக்கும். இதனால் இந்த விதிமுறை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் நோ-பால் மற்றும் வைடு நடுவர் வழங்கும் போது அதில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யும் முறையும் இந்த ஐ.பி.எல்.-ல் கொண்டு வரப்படுகிறது.
- காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
- இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.
- மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
- அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை அடங்கிய சி.ஐ.டி.யூ. சார்பில் 15 நிமிடம் அனைத்து வாகங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச்செயலாளர் நபி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், அப்துல் ஹமீது, சுல்தான், நவாஸ்கான், புரோஸ்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.
உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.
உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.
எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.
- அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிடங்கள் சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே வாழ்வாதாரமாக உள்ள தமிழகத்தைச் சார்ந்த கொத்தனார், ஆசாரிகள், பெயிண்டர்கள் உள்ளிட்ட கட்டிட தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இங்குள்ள கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று 100 மேற்பட்ட பெண்கள் உட்பட 300 கட்டிட தொழிலாளிகள் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேர்மன்வாடி பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
- புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.
அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.
அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தீயாய் பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ நோயார் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும்
மதுரை
மதுரையில் தீயாய் பரவி வரும் மெட்ராஸ்- ஐ கண் நோயால் தினம் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.
தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் மனிதர்களுக்கு பரவி வருகிறது.
அந்த வகையில் மெட்ராஸ் -ஐ என்று அழைக்கப்படும் கண் வலி நோய் தற்போது மதுரை பகுதியில் அதிகளவில் பரவி வருகிறது. காட்டுத் தீப்போல ஒவ்வொரு நாளும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு இந்த நோய் பரவும் தன்மை கொண்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முன்னெச்ச ரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் மெட்ராஸ்-ஐ யால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான சிகிச்சையில் கண்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்கும் வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த கண் வலி எளிதில் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் அருகில் செல்வதை தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கைகளை கொண்டு கண்களை கசக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
சுமார் 5 நாட்களுக்கு கண்கள் சிவந்து வீக்கம் ஏற்பட்டு நீர் வடியும் தன்மை கொண்ட இந்த நோய் காரணமாக கண் உறுத்தல் உள்ளிட்ட வலியும் காணப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது தான் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
- சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை, நிவாரணமும் வழங்கவில்லை.
இதனால் வாழ்வாதாரம் இழந்து சமைப்பதற்கு கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமபடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு.
- பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமலும் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டு வருகின்றன.
ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மணல் மூட்டையில் அடுக்கி இருப்பதை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் செங்கவராயன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கிய மேரி, திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்