search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House"

    • 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனையும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
    • பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உழைப்பாளி பூபாலை கைது செய்தனர்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33), கட்டடத் தொழிலாளி. இவரிடம், தைலாம்பாளையத்தில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு, திருப்பூா் செட்டிபாளையம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த வீராசாமி மகன் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57) (இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச்செயலாளா்) என்பவா் ரூ.5 லட்சம் பெற்றுள்ளாா்.

    இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமாலும் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இது குறித்து மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலு (எ) உழைப்பாளி பூபாலை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
    • சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம்.
    • மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

    மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
    • காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.

    திருப்பூர் :

    காங்கயம் சுற்றுப்பகு தியில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    மழையின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தது. அதில், நத்தக்காடையூர், ரத்தினபுரியில் விநாயகர் கோவில் அருகே கூலி தொழிலாளி, சுப்பிரமணி, என்பவர் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இதைப்போல் காங்கயம் - ஈரோடு ரோட்டில் முள்ளிப்புரம் பகுதியிலும், சுந்தராபுரி பகுதியிலும் பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைப்பட்டது.

    • வீடு புகுந்து ரூ.48 ஆயிரம் திருட்டப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் காமராஜ புரம் வட பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது30), பத்திர எழுத்தர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடக்கோவில் கிராமத்தில் இவரது தாத்தா உடல் நலக்குறைவால் இறந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.48 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

    இதுகுதித்து பெரியசாமி கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
    • இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.

    இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலை துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

    சாலையின் நடுவில் மட்டும் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதை உள்ளது.

    இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு
    சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை,டென்னிசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவா ர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.

    பின்னர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மூடப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன.

    தாராபுரம்:

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன. குடிசைகளை ஓட்டுவீடாக மாற்ற 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கச்சா வீடுகள் கட்டப்பட்டது.60 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டும் திட்டமும் இருந்தது.

    தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் வீடு கட்டும் திட்டம் தொடர்ந்தது. கடந்த 2011 முதல் பசுமை வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அரசு மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டினர். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.

    தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவே இல்லை. பயனாளிகள் கணக்கெடுப்பு பணியே முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் அரசு மானியம் உயர்த்தப்படுமென எதிர்பார்த்தனர். மாறாக கடந்த ஆண்டு வீடு கட்டும் திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டது.

    நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்காக, குடிசைமாற்று வாரியம் மூலமாகவும் கான்கிரீட் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.இத்திட்டங்கள் 2021-22க்கு பிறகு செயல்பாட்டில் இல்லை. கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அரசு மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். அனைவரும், இதுவரை ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    பொதுமக்கள் கூறுகையில், பசுமை வீடு திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு மாற்று திட்டம் வரவே இல்லை. மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் அறிவிப்புடன் நிற்கிறது.மத்திய அரசு திட்ட வீடு கட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அத்திட்டமும் வரவில்லை. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான திட்டம் நிறுத்தப்பட்டது கவலை அளிக்கிறது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றனர். 

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் வசிப்பவர்கள் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அவர் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
    • மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு ஏடி காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு ஏராளனோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி. காலனியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எதற்காக திடீரென வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி அன்பழகன், ராசப்பன் நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராமசாமி, ராம்குமார், சையது, சாமிநாதன், நல்லசாமி, மூர்த்தி, கொண்டான் உள்ளிட்டோரும் பொதுமக்களும் இருந்தனர்.

    • 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.
    • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகரில் விஜயகுமார் என்பவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் சுமார் 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.இதைக்கண்ட விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே வீடு, தோட்டத்தில் கொள்ளை நடந்தது.
    • போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் சரகம் தும்மக்குண்டு கிருஷ்ணாபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனைவி மீனாட்சி(வயது65). இவரது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் நகை ஆகியவை திருடுபோனது.இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(59).இவருடைய தோட்டம் கூடக்கோவில் அருகே உள்ள நெடுமதுரையில் உள்ளது. தோட்டத்தை நெடுமதுரை சேர்ந்த ஆண்டி என்பவர் பரமாரித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்புற கதவை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த மோட்டார் வயர் காயில், வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி மற்றும் இடுபொருட்கள், ரொக்கம் ரூ. 6 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.
    • சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.

    புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.

    * சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும்.

    * உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட்டுஅறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

    * சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர்.

    * கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    * இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.

    * நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.

    * சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    * சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    * கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.

    * கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது.

    * ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம்.

    * பொதுவாக பத்திரங்களை கம்ப்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.

    ×