search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural people"

    • மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன.

    தாராபுரம்:

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டங்கள் அமலில் உள்ளன. குடிசைகளை ஓட்டுவீடாக மாற்ற 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கச்சா வீடுகள் கட்டப்பட்டது.60 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கான்கிரீட் தொகுப்பு வீடு கட்டும் திட்டமும் இருந்தது.

    தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் வீடு கட்டும் திட்டம் தொடர்ந்தது. கடந்த 2011 முதல் பசுமை வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அரசு மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டினர். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், கிராமப்புற மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டது.

    தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவே இல்லை. பயனாளிகள் கணக்கெடுப்பு பணியே முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் அரசு மானியம் உயர்த்தப்படுமென எதிர்பார்த்தனர். மாறாக கடந்த ஆண்டு வீடு கட்டும் திட்டம் அடியோடு நிறுத்தப்பட்டது.

    நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி மக்களுக்காக, குடிசைமாற்று வாரியம் மூலமாகவும் கான்கிரீட் வீடு கட்ட 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.இத்திட்டங்கள் 2021-22க்கு பிறகு செயல்பாட்டில் இல்லை. கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் அரசு மானியத்தில் கான்கிரீட் வீடு கட்டலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். அனைவரும், இதுவரை ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    பொதுமக்கள் கூறுகையில், பசுமை வீடு திட்டம் நிறுத்தப்பட்ட பிறகு மாற்று திட்டம் வரவே இல்லை. மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் அறிவிப்புடன் நிற்கிறது.மத்திய அரசு திட்ட வீடு கட்ட, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அத்திட்டமும் வரவில்லை. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான திட்டம் நிறுத்தப்பட்டது கவலை அளிக்கிறது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியத்துடன் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றனர். 

    • கடலூர் அருகே ஜமாபந்தி நிறைவு நாளில் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
    • விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கருங்கூழி ஊராட்சியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருமுட்டம் ஆகிய வட்டங்களில் வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார்அதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புற பெண்களின் தொழில் முணைவோர் திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது மக்கள் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்னற்ற திட்டங்களை செய்யப்படுத்தி வருகிறார்.

    வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு வட்டங்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா விற்கான ஆணையினையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையினையும், 25 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும் ஆக மொத்தம் 402 பயனாளிகளுக்கு ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசாக திகழ்ந்து வருகிறது.

    கிராமப்புற ஏழை பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கி தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் விதவை பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1400 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த 46 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இத்திட்டங்களை கிராமப்புற பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ×