search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MInister M.P.Saminathan"

    • தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

    திருப்பூர் :

    தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.இதில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மானியகோரிக்கை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.அதில் திருப்பூர்மாவட்டம் காங்கேயத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ஆணையி ட்டுள்ளார்.

    இது காங்கேயம் பகுதி மக்களிடையே மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் காங்கேயத்தில் சிறுவிளையாட்டு அரங்கம்அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    • 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    மேலும் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல்சேர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர்களையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,21,941 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு கைபேசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில், மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் இன்று நடந்தது.

    விழாவில் திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் நாச்சிமுத்து, தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணை தலைவர்கள் ராம்தாஸ், செந்தூர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தம் மைதானத்தை திறந்து வைத்தார். செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்று பேசினார். தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கபடி கழக கொடியை துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஏற்றி வைத்தார்.

    பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ×