search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inaguration"

    • இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும்.
    • ஆகஸ்ட் 7ம் நாள் ”தேசிய கைத்தறி தினம்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை கலெக்டர் வினீத் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :- இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும். அத்தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும் இந்திய அரசினால் 2015 ம் ஆண்டு அறிவித்து ஆண்டுதோறும் கைத்தறி துறையினால் ஆகஸ்ட் 7ம் நாள் "தேசிய கைத்தறி தினம்" சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி ஆணையரால் 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சிகள் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், மிதியடிகள் மற்றும் பட்டு அங்கவஸ்திரங்கள் போன்ற சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை நடைபெற உள்ளது. மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கைத்தறி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடி மான்யம் வழங்கப்படுகிறது.மேலும், 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, திருப்பூர் சரகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வயதான (60 வயதிற்கு மேற்பட்ட) நெசவாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பு பரிசுகள் வழங்கியும், மாநில அளவில் விருது பெற்ற சிறந்த வடிவமைப்பாளர் கோயில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வடிவேல் , சிறந்த நெசவாளர் விருது பெற்ற சுமதி, திறன்மிகு நெசவாளர் விருது பெற்ற தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கம் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பரிசு மற்றும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.வெற்றிவேல், கணபதிபாளையம் தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் பழனிசாமி, கைத்தறி அலுவலர் பிரேமலதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
    • மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில், மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப்போட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் இன்று நடந்தது.

    விழாவில் திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் நாச்சிமுத்து, தலைவர் முருகேசன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணை தலைவர்கள் ராம்தாஸ், செந்தூர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவேகானந்தம் மைதானத்தை திறந்து வைத்தார். செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் வரவேற்று பேசினார். தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கபடி கழக கொடியை துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஏற்றி வைத்தார்.

    பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உலககோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. #HockeyWorldCup2018 #HWC2018
    புவனேஸ்வர்:

    14-வது உலககோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி வரை அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து (‘ஏ’ பிரிவு), நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா (‘பி’ பிரிவு), இந்தியா, பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, கனடா (‘சி’ பிரிவு), நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா (‘டி’ பிரிவு) உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    வரும் 9-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன. 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதியும், கால்இறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரை இறுதியும், 16-ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

    மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உலககோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை  கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிஷா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்றார். 

    இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மற்றும்  ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. #HockeyWorldCup2018 #HWC2018
    ×