என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவனேஸ்வர்"

    • ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால் ரத்து செய்யப்படுகிறது.
    • விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து விதமான விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ காரணங்களுக்காக மறு உத்தரவு வரும் வரை எந்த அதிகாரிக்கும் விடுமுறை மற்றும் விடுப்பு வழங்கப்படக்கூடாது.

    ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால் ரத்து செய்யப்படுகிறது மற்றும் விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இன்று வரை விடுப்பில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உலககோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. #HockeyWorldCup2018 #HWC2018
    புவனேஸ்வர்:

    14-வது உலககோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 16-ந்தேதி வரை அங்குள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், நியூசிலாந்து (‘ஏ’ பிரிவு), நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா (‘பி’ பிரிவு), இந்தியா, பெல்ஜியம், தென்ஆப்பிரிக்கா, கனடா (‘சி’ பிரிவு), நெதர்லாந்து, ஜெர்மனி, பாகிஸ்தான், மலேசியா (‘டி’ பிரிவு) உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    வரும் 9-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிகின்றன. 2-வது சுற்று 10 மற்றும் 11-ம் தேதியும், கால்இறுதி 12 மற்றும் 13-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 15-ம் தேதி அரை இறுதியும், 16-ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

    மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உலககோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை  கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒடிஷா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பங்கேற்றார். 

    இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மற்றும்  ஷாருக் கான், மாதுரி தீட்சித் ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. #HockeyWorldCup2018 #HWC2018
    ×