search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Recipes"

    • உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    • கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 100 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    சீரகம் - 2 சிட்டிகை

    பச்சை மிளகாய் - ஒன்று

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இஞ்சி வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
    • இஞ்சி துவையல் சாப்பிட மலச்சிக்கல், மார்பு வலி தீரும்.

    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 250 கிராம்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 7

    காய்ந்த மிளகாய் - 6

    புளி - 2 துண்டு

    வெல்லம் - 1 துண்டு

    துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

    கொத்தமல்லி இலை - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    பெருங்காய தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    * இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    * இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.

    * ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    * தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

    * இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 8

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்

    தண்ணீர் - 1 1/2 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கேரட் - 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,

    சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 1 கப்

    உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 2

    புளி - 2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    * பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

    * தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த இட்லி உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
    • இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - ஒரு கிலோ

    உளுந்து - கால் கிலோ

    வெந்தயம் -

    இளநீர் - தேவையான அளவு

    உப்பு - சிறிதளவு.

    செய்முறை

    இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

    அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும்.

    அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும்.

    சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!

    உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.

    கவனத்தில் கொள்ள வேண்டியவை..

    இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.

    அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.

    அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாகற்காயில் வைட்டமின் ஏ, கே சத்துகள் நிறைந்திருக்கின்றன.
    • இன்று பாகற்காய் ரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - கால் கிலோ,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    புளி - கோலி அளவு,

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    காய்ந்த மிளகாய் - 3,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.

    பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் ரெடி.

    இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிண்ணத்தில் ஊற்றி சூப் போன்றும் குடித்தால், பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
    • இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 2

    கொண்டைக்கடலை - கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 1

    மாதுளை - சிறிதளவு

    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

    கல் உப்பு - தேவைக்கேற்ப

    பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப

    செய்முறை :

    கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.

    எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

    இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
    • வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 1/4 கப்

    கேரட் துருவல் - ஒரு கப்

    காய்ந்த மிளகாய் - 6

    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    எண்ணெய் - 1 ஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

    இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை.
    • எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு அடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி - தலா கால் கிலோ

    தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு- 4 டீஸ்பூன்,

    முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,

    கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    காய்ந்த மிளகாய் - 6

    பூண்டு - 10 பல்,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, தோலுடன்கூடிய முழு கருப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலையை நன்றாக கழுவி காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.

    இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    அரை மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    4 மணிநேரம் கழித்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அரைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!

    பலன்கள்:

    கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரசத்தில் தேங்காய் பால் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
    • நண்டுக்கால் ரசம் சளித் தொல்லை, ஜலதோஷத்தை போக்கும்.

    தேவையான பொருள்கள்:

    கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    முழுப் பூண்டு - 1

    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்

    காய்ந்த மிளகாய் - 4

    தக்காளி - 2

    புளி - நெல்லிக்காய் அளவு

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தேங்காய்ப் பால்- 50 மில்லி

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடலை எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.

    செய்முறை:

    நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மிளகு, பூண்டு இரண்டையும் ஒன்றும் பாதியாக தட்டி வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போடவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் வதங்கிச் சுருண்டதும், புளிக்கரைசலை ஊற்றவும். தேவையான உப்பு போடவும்.

    ரசக்கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக் கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும் சமயத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

    மிதமான சூட்டில் இந்த ரசத்தை சூப் போன்று குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம்.

    இப்போது சூப்பரான நண்டுக்கால் ரசம் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான டிபன் இது.
    • குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்

    வெங்காயம்- 1,

    பீன்ஸ் - 10,

    கோஸ் - 50 கிராம்

    கேரட் - 1,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    ப.மிளகாய் - 2,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.

    காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×