search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka"

    • தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
    • போலீசார் காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோட்டில் இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதில் 2 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் அந்த கார் காந்திநகர் பஸ் நிலையம் அருகே, சாலைநடுப்புற தடுப்பில் மோதியது. இந்த விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதற்கிடையே காரில் பயணித்த 2 பேர் வெளியே குதித்து தப்பி ஓடி விட்டனர். எனவே பொதுமக்கள் காருக்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

    அதன்பிறகு காருக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு 450 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    கோவையில் விபத்தில் சிக்கிய காருக்குள் குட்கா பாக்கெட்டுகள் மூட்டைக்கணக்கில் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே சொகுசு காருடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    சொகுசு காரில் இருந்து தப்பி ஓடிய கும்பல் எங்கு இருந்து குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்து விபத்துக்கு உள்ளான காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    • டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
    • கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கரை முகமது அப்பாஸ் (வயது 39), வாணிப தெரு சேக் தாவூத் ஆகியோரிடமிருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • துறையூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 825 கிலோ குட்கா சிக்கியது
    • உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

    துறையூர்,

    திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவில் நியமன அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு. இவருக்கு துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் துறையூர் தெப்பக்குள தெருவில் உள்ள பாலாஜி (30) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர்.அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி ரோட்டில் பேன்சி கடை வைத்து நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தம்சிங் (45) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக கூறினார். பின்னர் உத்தம்சிங் கடைக்கு சென்று அங்கு பணிபுரியும் அசுசிங் (25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், உத்தம்சிங்கின் ஏற்பாட்டில் தெப்பக்குள தெருவில் உள்ள பரிதாபானு என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.இதனையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டதில் அங்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 825 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் துறையூர் போலீசில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் போலீசார் உத்தம்சிங், அசுசிங், பாலாஜி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அசுசிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். துறையூர் பகுதியில் ஒரே இடத்தில் 800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு லட்சம் பணம் பறிமுதல்
    • ஒருவர் கைது

    திருச்சி,

    திருச்சி லால்குடி பகுதியில் போலீசார் குட்கா ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பக்ரூதீன் என்பவர் குட்கா மற்றும் புகையிலை வியாபாரம் செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. அய்யன்வாய்க்கால் கரை பகுதியில் பக்ரூதீனுக்கு சொந்தமான இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 53 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 8 லட்சம் மதிப்பிலான அந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பக்ரூதீன் கைது செய்யப்பட்டார். 

    • சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம் :

    சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முசிறியில் 781 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
    • கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காமாட்சிபட்டியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீசார் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் காமாட்சி பட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கண்டெய்னர் லாரியிலிருந்து, டாட்டா ஏசி வாகனத்தில் மூட்டைகள் மாற்றப்படுவது கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான மதிப்பு உள்ள 30க்கும் மேற்பட்ட குட்கா பான் மசாலா மூட்டைகள் கொண்ட போதைப் பொருட்கள் மாற்றப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து விசாரணை செய்ததில் புனேவிலிருந்து தஞ்சாவூருக்கு பைப் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரான விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளினர் அசுரப்பட்டி விராலிமலை அகர பட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன் ( வயது 25), ஆகிய இருவரும், நாமக்கல்லில் உள்ள லாரி உரிமையாளருக்கு தெரியாமல் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. கடத்தி வந்த குட்கா பொருட்களை காமாட்சி பட்டி அருகே டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டுநர் சூரம்பட்டி செல்லிபாளையம் சோழன் மகன் திவாகர் ( வயது 23 )ஏற்ற சென்றுள்ளார். அங்கு மடக்கி பிடித்த முசிறி போலீசார் மூவரையும் கைது செய்து 781 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் கண்டெய்னர் வேன் மற்றும் டாடா ஏஸ் லோடு வேன் ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    • தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது
    • பாவூர்சத்திரம் போலீசார் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) மற்றும் வடக்கு கொண்டலூர் செங்கநாடானூர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரும் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    தமிழகத்தில் குட்கா புழக்கம் தாராளமாக உள்ளது என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
    தூத்துக்குடி:

    வல்லநாடு வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்திற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று வருகை தந்தார். 

    மணிமண்டபத்தில் குதிரையில் வெள்ளையத் தேவன் அமர்ந்திருப்பது போன்ற புதிய வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளை யத்தேவனுக்கு மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. முழு உருவ வெண்கலை சிலை அமைக்கவும் ரூ.39.75 லட்சம் அ.தி.முக. ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குட்கா பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  குட்கா பொருட்கள் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படுகிறது எனில் அந்த அளவிற்கு தாரளமாக புழக்கத்தில் உள்ளது.

    எம்,எல்.ஏ., உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தி.மு.க. மாவட்டக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்று கின்றனர். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல் தான். 

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் ஆக முடியும். தி.மு.க.வில் வாரிசுகள் தான் பதவிக்கு வர முடியும். சசிகலா அ.தி.மு.க.வுக்கு  வந்தால் வரவேற்போம் என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொல்லி உள்ளார். இதுகுறித்து சசிகலா தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், யூனியன் துணை சேர்மனும், ஒன்றிய செயலாளருமான லெட்சுமணப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், அவ்வையார், முன்னாள் கவுன்சிலர் உடையார், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், பசும் பொன் மக்கள் இயக்க தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆதிநாதன், முன்னாள் அவைத்தலைவர் பிள்ளை முத்து, ஒன்றிய பொருளாளர் ஜேசிபி குமார், கிளைக் கழக தலைவர் தங்கபாண்டி, பல்க் மணி, திருமலை, சிவனு, வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்.பாதர்வெள்ளை, எம்.ஜி.ஆர். மன்றம் பரம சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    உசிலம்பட்டி அருகே 2 கார்களில் கடத்திய 750 கிலோ புகையிலை-குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி மாநிலம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் மதுரை சரக துணைத்தலைவர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு மதுரை-தேனி சாலையில் உள்ள முத்துப்பாண்டி பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து 2 கார்களையும் போலீசார் சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா ஆகியவை 67 மூட்டைகளில் 750 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து கார்கள், மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த ஜெயவீரன் மகன் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ராமச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் மூர்த்தி, தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்ராஜ் மகன் அம்பிரிஷ், சுந்தரேஷ் மகன் திரிசங்கு என்ற சங்கர் என தெரியவந்தது.

    5 பேரையும் கைது செய்த போலீசார் குட்கா-புகையிலை எங்கிருந்து கடத்தி வந்தது? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×