search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட குட்காவை வீட்டில் பதுக்கிய வியாபாரி கைது: 200 கிலோ பறிமுதல்
    X

    விக்கிரவாண்டி அடுத்த நாரேரிகுப்பத்தில் குட்கா பதுக்கியவரை கைது செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.

    விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட குட்காவை வீட்டில் பதுக்கிய வியாபாரி கைது: 200 கிலோ பறிமுதல்

    • விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×