search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது; 105 கிலோ பறிமுதல்
    X

    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.


    பாவூர்சத்திரம் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது; 105 கிலோ பறிமுதல்

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது
    • பாவூர்சத்திரம் போலீசார் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) மற்றும் வடக்கு கொண்டலூர் செங்கநாடானூர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரும் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×