search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudalur"

    • தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.
    • காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா்.

    நீலகிரி மாவட்டம் கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்குள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, மாற்றுப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவினா் பாதிப்பு தகவல் கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணியை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா். கூடலூா் பகுதியில் கன மழை தொடர்வதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் நகராட்சி ஆணையா் (பொ) காந்திராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, தி.மு.க. நகர செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

    • யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
    • யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, புளிய ம்பா–றை அடுத்துள்ளது கத்தரித்தோடு கிராமம். இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இதனால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காட்டு யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள தவமணி என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு தவமணி எழுந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

    பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வெளி யேறியது. இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் அருகே உள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை தா்மலிங்கம் என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது.

    யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
    • யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே அரசு தேயிலைத் தோட்ட கழகத்தையொட்டிய பாண்டியாறு 4பி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

    அப்படி வரும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தேவாலா அட்டி பகுதியில் குடியிருப்புகளை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு அரசு தேயிலைத் தோட்டம் பாண்டியாறு எண். 4பி பகுதியில் நுழைந்தன.

    பின்னர் தொழிலாளி புவனேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்து சேதம் செய்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். சம்பவம் குறித்து தொழிலாளர்கள் டேன்டீ நிறுவாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    தொடர்ந்து காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது
    • யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது.

    நேற்று காலை, 5:45 மணிக்கு யானை சத்தமிட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேயிலை தோட்டத்தில் யானை குட்டி ஈன்றது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் காலன் தலைமையில், வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்

    . ஒரு மணி நேரத்துக்கு பின், யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது. 2 கி.மீ., துாரம் சென்ற யானை தேயிலை தோட்டம் ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டது.

    வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைக் குட்டி நல்ல நிலையில் உள்ளது. தாய் பால் குடித்து வருகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்றனர்.

    • வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.
    • பீரோவுக்குள் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மிளகாய் பொடி இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. பழுதான வயர்களை சரி செய்வது, மரங்கள், விளம்பர பலகைகள் போன்றவை மின் வயர்கள் செல்ல இடையூறாக இருந்தால் அவற்றை அகற்றுவது மிக முக்கியமான பணியாகும்.

    மேலும் இந்த பராமரிப்பு பணியின் போது அனைத்து மின் கம்பங்கள் மற்றும் வயர்கள் சோதனை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருகிறது.

    நேற்று முன் தினம் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். கொசுக்கடியில் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர். மேலும் பகல் பொழுதிலும் அவ்வப்போது மின்சாரம் வருவதும் தடை படுவதும் என இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டுக்குள் இருக்க முடியவில்லை.

    நேற்றும் இந்த நிலை தொடர்ந்தது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் விசிறி ஓடிய போதும் வெப்பம் தாங்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் மின் தடை மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிறு வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் மின் தடையால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக தடையற்ற மின்சாரம் வினியோகம் இருந்தது. ஆனால் தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மின் வினியோகம் நிறுத்தப்படுவதால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அரசு உதவித் தொகைக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க செல்லும் போது மின் வினியோகம தடைபடுவதால் அந்த பணிகள் பாதிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்களின் நேரம் விரயமாகிறது. விடுமுறை எடுத்து இந்த பணிகளை மேற்கொள்பவர்கள் இதனால் கடுமையாக சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதைப்பற்றி கவலை படாமல் அலட்சியமாக உள்ளனர். அவர்களிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது.

    பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம்ப், அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் தினமும் இரவு காட்டு யானை வந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில சமயங்களில் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் காட்டு யானை நின்று வருகிறது. இன்னும் 1 வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்க உள்ள நிலையில் காட்டு யானை வருகையால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே வனத்துறையினர் காட்டு யானை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெல்த்கேம்ப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

    கூடலூர்:

    கூடலூர் கிருஷ்ணசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்தகுமார் (வயது25). இவர் தனது நண்பர் தங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் இருந்து கூடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    கூடலூர் காஞ்சிமரத்துரை வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (17) என்பவர் தனது நண்பர் ஆதேசுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்துகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த நாகேந்திரன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தங்கம், ஆதேஸ் ஆகியோர் படுகாயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கூடலூரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் புது பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது பஸ்நிலையம் பின்புறம் ஒரு சாக்கு பையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 38) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த உலகமாயன் (வயது 50) என்பவரிடம் இருந்து 39 மது பாட்டில்களையும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பேச்சி (வயது 52) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    தேனி மாவட்டம் கூடலூரில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்ட ஹரிஹரன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஸ்டாலினுடன் அரசமர பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது பூச்சி தேவர் சந்து பகுதியைச் சேர்ந்த விஜய் (21) அங்கு போதையில் வந்தார். அவர் ஸ்டாலினிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    இதனை ஹரிஹரன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றில் குத்தினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயமடைந்த ஹரிஹரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஜயை கைது செய்தனர்.

    கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுரங்கனாறு நீர் வீழ்ச்சி, வெட்டுக்காடு, பளியங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டு சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அவை பராமரிக்கப்படாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    வெட்டுக்காடு சில்ராம படுகை பகுதியில் உள்ள பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ளார். தற்போது அவை தார் வெட்டும் பருவத்தில் இருந்துள்ளது. இங்கு புகுந்த யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர காவலுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரும் எங்களுக்கு இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    கூடலூர் அருகே மாயமான தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் சாமுவேல் மகள் ஷாமிலி(வயது23). கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக ஷாமிலி வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பள்ளிக்கு சென்று விசாரித்தபோது ஷாமிலி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமுளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் தேவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் தனது மகளை கடத்தியிருக்கக்கூடும் என சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.

    ×