search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus"

    • பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே ஒடேன் மற்றும் அதை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    கொரோனா பாதிப்புக்கு பிறகு பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நடந்தே சென்று வந்தனர்.

    மேலும் ஒடேன், ஜக்ககம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து ஒடேன் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கம் தொடங்கியது.

    ஒடேன் கிராமத்தில் பஸ்சிற்கு பூஜை செய்து தொடங்கப்பட்டது. பஸ் உல்லத் தட்டி, ஜக்ககம்பை, ஒடேன் வழியாக கோத்தகிரிக்கு இயக்கப்படுகிறது.

    கோத்தகிரியில் இருந்து காலை 6.50 மணி, மாலை 6 மணிக்கு என பஸ் இயக்கப்படுகிறது. பஸ் இயக்குவதற்கு உறுதுணையாக இருந்த கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமனுக்கு கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.

    இதில் ஊர் தலைவர் சண்முகம், ஊர் நிர்வாகிகள் காந்தி போஜன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஒடேன் ரவி, ராஜி, ரமேஷ், ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.com இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • முன்பதிவு பஸ்கள் நிரம்பினாலும் பொதுமக்கள் எந்நேரமும் பயணம் செய்ய ஏதுவாக முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட வெளியூர்களில் தங்கி தொழில் செய்பவர்கள் விரும்புவார்கள். மற்ற பண்டிகையை விட பொங்கலை தான் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

    சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வெளியூர் பயணத்தை பஸ், ரெயில்களில் திட்டமிட்டுள்ளனர்.

    சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்ட நிலையில் அரசு விரைவு பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. 12, 13, 14 ஆகிய 3 நாட்களிலும் நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்கள் எல்லாம் நிரம்பிவிட்டன.

    குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, பெங்களூர், கோவை, திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பஸ்கள் நிரம்பிவிட்ட நிலையில் பிற போக்குவரத்து கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து மட்டுமே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 900 அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பி விட்டதால் மதுரை, நாகர்கோவில், சேலம், கோவை, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 600 பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    அதிலும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் நாளை (11-ந்தேதிக்கு) மக்கள் முன்பதிவு செய்ய தீவிரமாக உள்ளனர். நாளை பயணம் செய்ய இதுவரையில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இதுவார இறுதியில் வழக்கமாக நடைபெறும் முன்பதிவு அளவாகும்.

    பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.com இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு பஸ்கள் நிரம்பினாலும் பொதுமக்கள் எந்நேரமும் பயணம் செய்ய ஏதுவாக முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் அதிக அளவில் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட போதிலும் வெளியூர் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த பாதுஷா கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார்.
    • ஊருக்கு வருவதற்காக கேரளா அரசு பஸ்சில் பாதுஷா ஏறினார்.

    நெல்லை:

    புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பாதுஷா(வயது 40). இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு கேரளாவில் இருந்து ஊருக்கு வருவதற்காக புறப்பட்ட அவர், கேரளா அரசு பஸ்சில் ஏறினார். இன்று அதிகாலை தென்காசி பஸ் நிலையத்திற்கு பஸ் வந்து நின்ற நிலையில், பாதுஷா மட்டும் இறங்கவில்லை. அவரை கண்டக்டர் எழுப்ப முயன்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு வந்த செவிலியர், பாதுஷாவை சோதனைசெய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு நடந்தது.
    • 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பாலக்காடு கோட்ட ெரயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் விவசாயிகள், தொழில்துறையினர், வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தென்னை மற்றும் தென்னை உற்பத்தி பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்த விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு தென்னை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ெரயில்வேயில் உள்ள வசதிகள் குறித்து கோட்ட மேலாளர் விரிவாக தெரிவித்தார்.

    பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ெரயிலில் 16 டன் அளவுக்கு பார்சல்கள் கையாளும் வசதி உள்ளதாகவும், அதை பயன்படுத்தி தென்னை விவசாயிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் தங்கள் பொருட்களை கொண்டு செல்லலாம் என கூறினார்.

    மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பண்ணை விளைபொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரேக்குகள் கொள்கலன்களையும், சிறப்பு ெரயில்களையும் ெரயில்வே ஏற்பாடு செய்யும் எனவும் தெரிவித்தார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் உள்ள 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. எஸ்.இ.டி.சி., பஸ்கள் வாயிலாக பார்சல்களை அனுப்பி வைக்கும் 7சி கூரியர் சேவை திட்டம் அமலில் உள்ளது. சென்னை, கோவை, நாகர்கோவில், திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட எஸ்.இ.டி.சி., பணிமனைகளில் இருந்து 5 முதல் 80 கிலோ வரை பார்சல், கி.மீ.,க்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் 300 கி.மீ.,க்கு அதிகமாக பயணிக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்களில் மட்டுமே உள்ள இந்த திட்டத்தை அரசு பஸ்களிலும்(டி.என்.எஸ்.டி.சி.,) நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், எஸ்.இ.டி.சி., பஸ்கள் நீண்ட தூரம் பயணம் என்பதால், பார்சல் முன்பதிவு சற்று குறைவாகவே உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் 150 கி.மீ., வரையிலான பயணத்துக்கு பார்சல்களை அனுப்ப வசதியுள்ளதா என்று வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர்.ஒவ்வொரு கோட்டத்திலும், 150 முதல் 250 கி.மீ., சென்று திரும்பும் தொலைதூர பஸ்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. டி.என்.எஸ்.டி.சி., பஸ்களில் பார்சல் சேவை அடுத்தாண்டு துவங்கப்பட உள்ளது என்றனர்.

    • ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும்.
    • tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஜனவரி 15 பொங்கல் பண்டிகையும், 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கலுக்கு முந்தைய நாள் 14-ந்தேதி போகி கொண்டாடப்படுகிறது. ஆதலால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பே இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துவிடும் நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இன்று முதல் அரசு விரைவு பஸ் களுக்கு முன்பதிவுக்கு திட்டமிடலாம்.

    ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை போல பொங்கலுக்கும் பெருமளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முந்தைய முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. குறைந்த அளவில் தான் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புக்கிங் விறுவிறுப்பாக இருக்கும். முன்பதிவுக்கு தேவையான பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பொங்கல் சிறப்பு பஸ்கள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய 3 நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை போல பொங்களுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை.
    • மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திண்டிவனம் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை. மேலும் தற்போது ஆவணிப்பூரில் இருந்து வரும் பஸ்களும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராம த்திற்கு வரவில்லை. மாலை நேரங்களில் பஸ் சரி வர வராததால் இரவு 8 மணிக்கு மேல் பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

    இதனால் ஆவணிப்பூரில் இருந்து வந்த பஸ்சையும், அதேபோல திண்டிவனத்தில் இருந்து ஆவணிப்பூர் வந்த 2 அரசு பஸ்சையும் சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 அரசு பஸ்சையும் சிறைப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

     பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
    • புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் , அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார்சாசோதனை செய்தனர். அப்போது சாராயம் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டாள் குப்பம் சித்தூரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என தெரியவந்தது. இவர் இவர் புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.

    • வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,

    கடலூர்:

    வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • அமிர்தி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
    • விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அமிர்தியில் வன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நாக நதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    சில இடங்களில் குலம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    இதில் அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் அமிர்தியிலிருந்து வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் இந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர் கன்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாலை சீரமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர்.

    வனத்துறையில் நிதி இல்லை

    அமிர்தி சாலையை சீரமைக்க வனத்துறையினர் தற்போது நிதி இல்லை என கூறுகின்றனர்.இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது.
    • கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) . கார் மெக்கானிக் . செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் வசந்தராஜா (37) என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×