search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  குட்டைக்குள் இறங்கிய அரசு பஸ்
    X

    குட்டைக்குள் இறங்கிய அரசு பஸ். 

    பல்லடம் அருகே குட்டைக்குள் இறங்கிய அரசு பஸ்

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×