என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி
- கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது.
- கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) . கார் மெக்கானிக் . செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் வசந்தராஜா (37) என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்