search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiranbedi"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கவர்னர் கிரண்பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #Kiranbedi
    காரைக்கால்:

    கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை கரையை கடந்தது. அப்போது காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் பலத்த சேதம் அடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி காரைக்கால் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடவில்லை. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன.

    இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கவர்னர் கிரண்பேடி இன்று காலை புதுவையில் இருந்து காரைக்கால் வந்தார். அவரை கலெக்டர் கேசவன் வரவேற்றார். பின்னர் கவர்னர் கிரண்பேடி காரைக்கால் அரசலாற்றுக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து திருமலை ராயன்பட்டினம், பட்டினச்சேரி பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து அவர் குடை பிடித்தபடி புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் படகுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மீனவர்கள், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பட்டினச்சேரியில் உள்ள கடற்கரையை ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் கஜா புயல் தொடர்பாக கலெக்டர் கேசவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். #GajaCyclone #Kiranbedi
    அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததற்கு கவர்னர் கிரண்பேடி தான் காரணம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். #cmnarayanasamy #governorkiranbedi

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, காரைக்கால் ஜெய பிரகாஷ் நாராயணன் ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு சார்ந்த சம்பள மானியமாக நடப்பாண்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் .அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்துள்ளது.

    இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரின் நிதி அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை கவர்னர் மதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அனுப்பிய கோப்புக்கு அனுமதியும் தரவில்லை.

    அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தோடு இயங்க முடியாது. பல நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக இயங்குகிறது.

    கதர் வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், கூட்டுறவு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எண்ணாமல் மக்களுக்கான சேவை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. கவர்னர் லாபத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என சொல்கிறார்.

    பிற அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி தர முட்டுக்கட்டையாக உள்ளார். விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும்.

    சம்பந்தப்பட்ட துறைகளை அழைத்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கவர்னர் உடனடியாக அதை அமல்படுத்த சொல்கிறார். அந்த அறிக்கையில் ஆட்குறைப்பு மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தம், சிக்கனம் ஆகியவற்றையும் பரிந்துரை செய்துள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல கடமைகள் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும். கவர்னருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால்தான் அவர் அரசு நிர்வாகத்தை முடக்க நினைக்கின்றார்.

    அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இதன்பிறகு கவர்னரின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    புதுவை ஜிப்மரின் கிளை 50 ஏக்கரில் சேதராப்பட்டில் அமையவுள்ளது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடனடி விபத்து மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு மையம், இதயநோய் சிகிச்சை, வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜிப்மர் கிளை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.ஆயிரத்து 200 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதற்கான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். புதுவையில் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் 10 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் இருந்தது.

    தற்போது புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டாக குறைத்துள்ளது. 8 ஆண்டுக்கு பிறகும் படிப்பை முடிக்காமல் 50 மாணவர்கள் உள்ளனர்.

    இவர்கள் என்னை சந்தித்து தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேசி கூடுதலாக ஒரு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க கோரியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #cmnarayanasamy #governorkiranbedi

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது என்றும் இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சமூக பங்களிப்பு நிதியை முறைகேடாக கவர்னர் மாளிகை வசூலித்ததாக முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு, கவர்னர் கிரண்பேடி பதில் அளித்தார். அதில் கவர்னர் மாளிகையில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்றைய தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை வெளியிட்டு அதில் சமூக பங்களிப்பு நிதி பெற கவர்னர் மாளிகையில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

    மேலும், சமூக பங்களிப்பு நிதி வசூல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் கிரண்பேடி மீது நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-


    முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு அலுவலகங்கள் நிதி பரிமாற்றங்கள் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்பதை நம்பகூட முடியாமல் இருக்கலாம். புதர்களை கொண்ட 86 கி.மீ. உள்ள 23 கால்வாய்கள் நன்கொடையாளர்கள் மூலம் எந்திரத்தைக் கொண்டு தூர்வாரப்பட்டது. இதை செய்ய அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு பிடித்திருக்கும். இது அரசுக்கு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் சமூகத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடப்பட வேண்டிய தருணம். ஒரு வேளை முதல்-அமைச்சர் இவ்வளவு பெரிய சமுதாய ஆதரவை அரசு சேவைக்காக ஒரு போதும் அனுபவத்தில் கொண்டிருக்கமாட்டார் போலும். நீண்ட நாள் நீர் மிகு புதுவையாக மாற்றம் காண இது ஒரு எழுதப்படுகின்ற சரித்திரம்.

    நன்கொடையாளர்களில் பலர் அடுத்த ஆண்டு முதல் ஆண்டு பராமரிப்பை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். இது அவர்களுக்கு சொந்த செலவையே தரும். புதுவை இனி எப்போதும் நீர் மிகுந்தும் வளமாகவும், பசுமையாகவும் காணப்படும்.

    இதற்காக கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது. ஆனால், நமது முதல்-அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கிறார். பொய் சொல்வது பாவம் என்பதை அவர் உணரவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாறாக நாங்கள், கவர்னர் மாளிகைக்கு வரும் பரிசு பொருட்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

    இதில் கூட முதல்- அமைச்சர் பொய் கூறுவது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய அறிவுறுத்தல்களின் படியே நடக்கிறது. இங்கு வாங்கப்படுகின்ற தனிப்பட்ட பரிசு முதற்கொண்டு அனைத்தும் திரும்ப வெளியே வழங்கப்படுகிறது. அல்லது கலைப் பொருட்களாக பாவிக்கப்படுகிறது.

    கவர்னர்மாளிகை தேவையானவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அரசின் நிதி பற்றாக்குறையை போக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது.

    பொருளாதாரம் படைக்கப் பெற்றவர்களுக்கும், பொருளாதாரத்தில் வாடுபவர்களுக்கும் இடையே கவர்னர் மாளிகை தொடர்ந்து ஒரு பாலமாகவே செயல்படும். ஒரு வேளை, முதல்- அமைச்சர் சமுதாயமும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரு நேர்மறை சேவைக்கான கலாச்சார சந்தர்ப்பத்தை கடந்த கால அனுபவத்தில் பெற்றிருக்கமாட்டார் போலும்.

    இதை கற்றுக்கொள்ள இன்னும் இது தாமதமில்லை. முதல்-அமைச்சர் அவருடைய மக்களுக்காக தன்னை மாற்றி கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை என்று கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் பெற்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதற்காக முதல்- அமைச்சர் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக உருவாக்கி ரூ.85 லட்சம் வரை வசூல் செய்து இருக்கிறார்.

    இது, விதிமுறைகள்படி தவறானது. இதில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை.

    புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை கால்வாய்களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை.

    இந்த நிலையில் “நீர்வளமிக்க புதுச்சேரி” என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாய சிந்தனை மிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    யாரையும் கட்டாயப்படுத்தி இப்பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை வலியுறுத்தவில்லை. இந்த பணி நடைபெறும்போது அரசு அல்லது அரசு முகமைகள் மூலமாக எந்வித பணபரிமாற்றமும் நடப்பதில்லை. கொடையாளர்கள், பணியை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் இடையே மட்டுமே பணபரிமாற்றம் நடக்கிறது.

    எவ்வித நிதி பரிமாற்றமும் இல்லாமல் பொதுப்பணித்துறை நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமுதாய பங்களிப்புடன் இதுவரை 25 பாசன கால்வாய்கள் சுமார் 84 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளன.

    இந்த பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணம் எதையும் கவர்னர் மாளிகை நேரடியாக பெறவில்லை.

    பணபரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும் போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்.

    கவர்னரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவநீதிதாஸ், கவர்னர் மாளிகையில் பணியை தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் மத்திய உள்துறை, மாநில நிதித்துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் கவர்னரின் ஆலோசகராக அதாவது கவர்னரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி தான் கவர்னரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார்.

    யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர் வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடும் நடக்கவில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.  #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தல்
    வில்லியனூர்:

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    கவர்னர் கிரண்பேடி இன்று காலை வில்லியனூர் அருகே அகரத்தில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த கல்லூரி நிர்வாகத்தினரிடம் மழைநீரை சேகரிக்க எவ்வளவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது? மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? கல்லூரி வளாகத்தில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன? என்று கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கல்லூரி நிர்வா கத்தினர் மழைநீரை சேமிக்க 20 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என் றும், கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும், கழிவு நீரை சுத்திகரித்து தோட்டங்களுக்கு பயன்படுத்துவதாக பதில் அளித்தனர்.

    இதற்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் கிரண்பேடி கல்லூரி வளாகத்தில் மேலும் மழை காலங்களுக்குள் 100 மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும், 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இதனை செயல்படுத்தி தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கவர்னர் கூறினார்.

    அதோடு தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மழைநீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார்.

    அப்போது அங்கிருந்த பல்கலைக்கழக என்னீயர்களிடம் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் மழை நீரை சேகரித்து நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என்றும், அதற்காக கூடுதல் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உடன் இருந்தார்.
    அரசு விழாவில் நடந்த மோதல் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு அளித்துள்ளார். #anbalaganmla #kiranbedi

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று நடந்த அரசு விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.எ. அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது பேச்சை நிறுத்தும்படி கவர்னர் கிரண்பேடி கூறினார். அவர் தொடர்ந்து பேசியதால் மைக்கை துண்டிக்க உத்தரவிட்டார். இதனால் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்பழகன் எம்.எல்.ஏ. விழாவை புறக்கணித்து விட்டு வெளியேறினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் இன்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கவர்னர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நேற்றைய தினம் காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுவை அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக புதுவை மாநிலத்தை அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நானும் பங்கேற்றேன்.

    சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் முதலில் என்னை பேச அழைத்தனர். நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் இருந்து நான் பேசும் இடத்திற்கு வந்து நீங்கள் இதற்கு மேல் பேசக்கூடாது உங்கள் பேச்சை நிறுத்துங்கள் என்று தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவது போல் கூறினார்.

    அதற்கு நான் தயவு செய்து உங்கள் இருக்கையில் அமருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் கவர்னர் நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூறினேன்.

    அதற்குள் அங்கிருந்த மைக் இணைப்பாளரிடம் எனது மைக் இணைப்பை துண்டிக்க கவர்னர் உத்தரவிட்டார். அவரும் எனது மைக் இணைப்பை துண்டித்தார்.

    இதனால் நான் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது கவர்னர் தனது இருக்கையில் அமராமல் என்னை மேடையை விட்டு ‘யூ கோ ’என்று ஒருமையில் பேசி என்னை வெளியேறுமாறு சொன்னார். நான் என் பேச்சை நிறுத்திவிட்டு என் இருக்கையில் அமர சென்றபோது என்னை தனது இரண்டு கைகளாலும் அகல விரித்து என்னை மறித்து வெளியே போ எனக் கோபமாகக் கூறினார்.

    அப்போது நான் மக்கள் பிரதிநிதி என்னை வெளியில் போகச் சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேண்டுமானால் வெளியில் போங்கள் என கூறினேன் அதற்கு பிறகும் என்னை அவர் இருக்கையில் அமர விடாமல் தடுத்தார்.

    இதனை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இதற்கு மேலும் இங்கிருப்பது எனது மரியாதைக்கு இழுக்கு என்று நினைத்து மேடையிலிருந்து நான் வெளியேறி விட்டேன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த விழாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணெதிரில் நடந்தது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை விழா மேடையில் பேச விடாமல் தடுத்ததோடு என்னை விழா மேடையில் இருந்து கவர்னர் என்ற அதிகாரத்தில் வெளியேற கூறியது எனது உரிமையை பறிக்கும் செயலாகும். கவர்னரின் இந்த நடவடிக்கை என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தும் செயலாகும். எனவே கவர்னர் மீது உரிமை மீறல் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    அவருடன் அ.தி.முக. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் வையாபுரி மணிகண்டன் அசனா ஆகியோரும் சென்றனர். #anbalaganmla #kiranbedi

    புதுவையில் காவலர் தேர்வு வயது வரம்பை கவர்னர் கிரண்பேடி உயர்த்த வேண்டும் என்று ஓம்சக்தி சேகர் கடிதம் எழுதியுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது நடைபெற உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் வயது வரம்பு தொடர்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் கோரிக்கையினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    புதுவை அரசின் காவல் துறை 390 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து வர வேற்றுள்ளது. ஆனால் இந்த தேர்வுக்கான வயது வரம்பு தற்போது 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பணி நியமன விதியில் 22 ஆக குறைத்து இருப்பது புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    புதுவையில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு அதை விட அரசு வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. எனவே தற்போது நிலவி வரும் வேலை வாய்ப்பற்ற அசாதாரண சூழ்நிலையில், இந்த தேர்வுக்கான வயது உச்ச வரம்பினை மாற்றம் செய்வது என்பது தவிர்க்க முடியாதது.

    எனவே புதுவையில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் நலன் கருதி பணிநியமன விதியில் மாற்றம் செய்ய கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் பரிதாபமான நிலையினையும் கருத்தில் கொண்டு தற்போது உள்ள பணிநியமன விதியை மாற்றி வயது உச்ச வரம்பினை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.

    விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அரசு அதிகாரிகள் கவர்னரின் டுவிட்டர் உத்தரவுகளுக்கு பணிந்து செயல்பட வேண்டும் என அவசியமில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதற்கு கவர்னர் எனக்கு டுவிட்டரிலேயே பதில் அளித்திருந்தார்.

    மறுநாள் கவர்னக்கு நான் கடிதம் அனுப்பினேன். இந்தக் கடிதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன். டெல்லி அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    புதுவை மாநிலத்துக்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளிக்கும் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும்.


    கடந்த 2 ஆண்டுகளில் புதுவை மக்களுக்கு கவர்னர் என்ன செய்துள்ளார்? இலவச அரிசி போடுவதை தடுத்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

    மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. இதனை தடுக்கும் வகையிலேயே கடந்த 2 ஆண்டுகளாக கவர்னர் செயல்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளேன்.

    புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கூடுதலாக 240 இடங்கள பெற்றுள்ளோம். சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகே‌ஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது.

    இந்த இடங்களுக்கு மாணவர்களை சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் சேர்க்க இருக்கிறோம். இதனால் கல்லூரிக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும்.

    மேலும் பொறியியல் பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 20 இடங்களை பெற்றுள்ளோம்.

    இந்த இடங்களையும் சுயநிதி அடிப்படையிலேயே சேர்க்க உள்ளோம். கால்நடை மருத்துவ கல்லூரியையும் விவசாய கல்லூரியையும் இணைந்து விவசாய பல்கலைக்கழக அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryGovernor #Kiranbedi #PuducherryCM #Narayanasamy
    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் செயல்பாட்டால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி அடிக்கடி அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார்.

    உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சமீபத்தில் கூறி இருந்தார்.

    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டி அளித்தார். கவர்னருக்கு அதிகாரிகளை கூட்டி ஆலோசனை நடத்த அதிகாரம் இல்லை. அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார். இந்த போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளம் மூலமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் அலுவலக பணிகள், கடமைகள், பொறுப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எதிரான கருத்துக்களை கூறுகிறார்.

    கவர்னர், அதிகாரிகளுக்கு இடும் உத்தரவுகளை சீர் குலைக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் இருக்கின்றன. இப்படி அவர் சொல்வதால் மாநில வளர்ச்சியின் வேகம் பாதிக்கும் என்பதை அவர் உணராமல் இருக்கிறார் என நான் கருதுகிறேன்.


    மாநில வளர்ச்சிதான் அவருக்கு முதன்மையானது என்று கருதினால் இது போன்ற கருத்துக்களை அவர் தெரிவிக்க கூடாது.

    கவர்னர் அலுவலகத்துக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது என்பது சட்டத்திலும், விதிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் படித்து பார்க்கலாம்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது டெல்லி மாநிலத்துக்காக சொல்லப்பட்டது. அந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது.

    எல்லா நிலைகளிலும் புதுவையை நம்பர்-1 யூனியன் பிரதேசமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது திட்டம். கவர்னர் மாளிகையை பொறுத்த வரை சட்டத்தின்படியும், விதிகள்படியும் எங்கள் பணிகளை மக்களுக்காக அதிகபட்ச அளவுக்கு செய்வோம்.

    இந்த பணி எப்போதும் தொடரும். மக்கள் மாளிகையாக கவர்னர் மாளிகை இருக்கும். அதிகாரிகளும் கவர்னரின் பணிகளை உணர்ந்து இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சரின் தகவல்கள் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளுகிறது. இது, மாநில வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது.

    கவர்னரின் உத்தரவு என்பது தனிப்பட்ட கிரண்பேடியின் உத்தரவு அல்ல. அது, கவர்னர் மாளிகையின் உத்தரவு. அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பாடுகள் தொடரும்.

    அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிகளை ஏற்படுத்துவோம். பழைய குறைபாடுகளை களைந்து முன்னேற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #Kiranbedi #Narayanasamy
    அதிகாரிகளை கவர்னர் கிரண்பேடி மிரட்டுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நேற்று முன் தினம் நடந்த சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது புதுவையில் சிறு மற்றும் குரு தொழில் செய்யும் வியாபாரிகள் சேவை வரியால் பாதிக்கப்பட்டு 35 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.

    சில பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதனை குறைத்தால் பல தொழிற்சாலைகள் புதுவைக்கு வர வாய்ப்பு உள்ளது. என்று கூறினேன். இதனை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புகிறேன்.

    புதுவையில் வழக்கம் போல் கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பல இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு செய்யலாம். ஆனால், விதிமுறைகளை மீறி அதிகாரிகளின் கூட்டத்தை நடத்த கூடாது.

    தனது உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதிகாரிகளை கவர்னர் மிரட்டுகிறார். அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக உத்தரவிட முடியாது.

    கவர்னர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனை அவர் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். நானும் பலமுறை எடுத்து கூறியுள்ளேன். எந்த தகவலையும் அவர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர் விளம்பரத்துக்காக செய்து வருகிறார்.

    தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை உலக தரத்தில் உயர்த்த மத்திய மீன்வளத்துறையிடம் கேட்டு கொண்டேன். அதற்கான திட்ட வரைவை அனுப்பி வைத்தால் ரூ.10 கோடி வழங்குவதாக மத்திய அரசு கூறி உள்ளது.

    மத்திய விமான கழகத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுவையில் 10 இடங்களில் தலா ரூ.1 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

    புதுவை காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜோசப் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நான் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் பேசி கொலையாளிகளை பிடிக்க கேட்டு கொண்டேன்.

    அதன் அடிப்படையில் குற்றவாளிகள் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்வதாக தமிழக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

    புதுவை போலீசார் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுத்துள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆலோசனை கூறி உள்ளேன்.

    புதுவையில் முதல் கட்டமாக 8 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும். மேலும் புதிதாக 750 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #kiranbedi

    தேவையற்ற கருத்துக்களை கூறி பிராந்திய மக்கள் இடையே கவர்னர் மோதலை உருவாக்குகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். #kiranbedi

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெறுதல் சம்பந்தமான பிரச்சினையில் கவர்னர் தேவையற்ற கருத்துக்களை எடுத்துக்கூறி பிராந்திய அளவில் மோதல் போக்கை உருவாக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளார்.

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்ட நிலையில இன்றைய அரசியல் நிலவரப்படி ஏதோ ஒரு காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல் படக்கூடிய இடமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு போன்று புதுவை அரசியல் நிர்வாகம் இருந்து வருகிறது.

    நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து சம்பந்தமாக 1998-ம் ஆண்டிலேயே மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் மாநில அந்தஸ்து கிடைக்க கொள்கை முடிவினை அறிவிக்க செய்தார். அதன்பிறகு அ.தி.மு.க. சார்பில் கூட்டப்பட்ட பல்வேறு செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மக்கள் பிரதிநிதிகள் சபையாக இருக்கின்ற புதுவை சட்டமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும் கட்சி வித்தியாசமின்றி மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப மாநில அந்தஸ்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால், சட்டமன்றத்தை கேவலப்படுத்துகின்ற விதத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

    உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் சைனா மின் மீட்டரை திரும்ப பெற கோரி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்தோம்.

    புதுவையில் அரசானது இவற்றை கருத்தில் கொள்ள வில்லை. நாராயணசாமி வழக்கம் போல் மக்களின் மீது சிந்தனை இல்லாமல் உள்ளார்.

    தமிழகத்தைபோல் புதுவையிலும் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும். விரைவில் மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மின் மீட்டரை திரும்ப பெற கோரி அ.தி.மு.க. தலைமை கழகத்திடம் அனு மதி பெற்று புதுவையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

    புதுவையில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    ஆனால், ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகாலமாக உதவித் தொகை பெற்று வந்த வர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சொற்ப காரணங்களை கூறி உதவித்தொகையை இந்த அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

    நிதி மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.க் களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் கொடுக்க வில்லை. ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டணம் வாங்காத வக்கீலாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #kiranbedi

    காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #PuducherryGovernor #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி காவல்துறை தொடர்பான விழாவில் பங்கேற்க இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை நீண்ட காலமாக யூனியன் பிரதேசமாக இருந்து வருகிறது. தற்போது மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.

    காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதி மக்கள் தனிமாநில அந்தஸ்தை விரும்பவில்லை. இது தொடர்பாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வலியுறுத்துவார்கள். மாநில அந்தஸ்து தொடர்பாக நான் டெல்லி செல்லவில்லை.

    நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவும், அதில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதனை அரசு ஏற்று நடக்கும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi #SpecialStatus
    ×