search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiran bedi"

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்கள் கடமையாற்ற கவர்னர் வழிவிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதுவை மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதுவை மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுவை மாநில நிர்வாகிகளை கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினரகன் அறிவித்துள்ளார். தொடர்ந்து மாவட்ட, தொகுதி, அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படும்.

    தமிழக - புதுவையில் எங்களது கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்திலும், புதுவையிலும் தினகரன் தலைமையில் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்போம்.

    சுயாட்சி தத்துவமே திராவிட கழகங்களின் கொள்கை. இதனை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசி உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவர்னர் முடக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் கடமையாற்ற கவர்னர் இடையூறு செய்யாமல் வழிவிட வேண்டும்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பிடித்தபோதே நியமன எம்.எல்.எ.க்களை நியமித்திருக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த காலதாமதமே இன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்க காரணம்.

    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது மக்கள் குறைகளை நேரடியாக கேட்போம் என்று கூறி இருந்தனர். ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் குறைகளை கேட்க கவர்னர் நேரடியாக செல்கிறார்.

    புதுவை காங்கிரஸ் அரசு மக்கள் குறைகளை கேட்டால் கவர்னருக்கு வேலை இல்லாமல் போய்விடும். இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு மக்கள் குறைகளை நேரடியாக கேட்க வேண்டும்.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவு. யாரிடமும் கையேந்தாமல் நமது உரிமைகளை பெற வேண்டும் என்பது தான் புதுவை மக்கள் விரும்புகிறார்கள். மாநில அந்தஸ்து கோரிக்கையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சபையை ஒரு வாரம் முன்னதாக 19-ந்தேதியே முடித்தனர்.

    அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு தடையில்லை என்பதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

    இதற்கிடையே யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட்டிற்கு கவர்னரின் ஒப்புதல் பெற்று சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கவர்னர் பட்ஜெட் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாமலேயே சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அரசே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    இன்று மின்துறை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் செயல்படவும் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன்.

    இதற்கான கோப்பு கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. 26-ந்தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryAssembly #Kiranbedi
    புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.முருகன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை கவர்னரை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் கவர்னர் நியமனம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். தற்போது புதுச்சேரி மாநில கவர்னராக உள்ள கிரண்பெடி அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் தேவையின்றி குறுக்கீடுகளையும், இடையூறுகளையும் செய்துவருகிறார்.

    குறிப்பாக அரசு பணியாளர் நியமனம், மருத்துவ மாணவர் சேர்க்கை, அதிகாரிகள் மாற்றம் என தலைமை செயலாளர் எடுக்கும் முடிவுகளில் கிரண்பெடியின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பதவி பிரமாணத்தின்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அவர் மீறிவிட்டார். எனவே அவரை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இந்த வழக்கை வேறு டிவிசன் பெஞ்சு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி மாநில கவர்னர் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு புதுச்சேரி மாநில கவர்னருக்கும் பொருந்தும் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PuducherryGovernor #KiranBedi
    சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும் என்று கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    புதுவை கவர்னர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    மேலும் அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கவும் உத்தரவிட்டது. சட்டசபைக்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரி கோர்ட்டில் தனலட்சுமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நியமன எம்.எல்..ஏ.க்கள் நியமனம் செல்லும் எனவும், அவர்களை சட்டசபைக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தடை எதுவும் வழங்கப்படவில்லை.

    எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். அவர்களை தடுப்பது நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகும்.

    இவ்வாறு அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #GovernorKiranBedi #NominatedMLAs
    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை தனது கருத்தை தெரிவிப்பதாக கவர்னர் கிரண்பேடி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்துக்கு ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படாமல் குப்பை மேடாக இருப்பதை கண்ட கவர்னர் கிரண்பேடி அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களிடம் அலுவலகத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்று காலை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் ஊசுட்டேரியை ஆய்வு செய்ய சென்றார். அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் மரக்கன்று நட்டார்.

    பின்னர் அங்கிருந்து வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகம் முழுவதையும் சென்று ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையாக உள்ளதை கண்டு துப்புரவு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் நான் முக்கியத்துவம் கொடுப்பது தூய்மை பணிக்கும், நீராதாரத்தை பாதுகாக்கவும் மட்டுமே.

    புதுவை தற்போது தூய்மையாக உள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. அனைவரின் ஒத்துழைப்பு முக்கியமாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது.

    ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பு புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது.

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது.

    எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    எனவே, டெல்லி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது சம்பந்தமாக சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

    அந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    கவர்னருக்கு உள்ள அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று வெளியிட்ட தீர்ப்பை ஏற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி உள்ளார். #DelhiPowerTussle
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது, அது இந்திய அரசியல் அமைப்பு அமர்வு 5 நீதிபதிகள் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, முழு தீர்ப்பை நான் படிக்கவில்லை.

    முக்கிய அம்சங்களை நான் கூற விரும்புகிறேன், புதுவைக்கு 100-க்கு 110 சதவீதம் இந்த தீர்ப்பு பொருந்தும். கவர்னர் அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என தொடர்ந்து 2 ஆண்டுகளாக அறிவுறுத்தி உள்ளேன். 19 முறை கடிதம் எழுதியுள்ளேன், அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போட அதிகாரம் இல்லை என கூறியுள்ளேன்.

    பல பகுதிகளுக்கு சென்று பார்க்க உரிமை உண்டு. ஆனால், தனியாக உத்தரவு போட அதிகாரம் இல்லை என பல பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பக் கூடாது.

    முக்கிய கொள்கை முடிவுகளை மட்டுமே அனுப்ப வேண்டும். நான் கூறிய அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. துணை நிலை ஆளுனர் மக்கள் நல திட்டங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்யும்போது தடையாக இருக்க கூடாது.

    கவர்னர் முட்டுக்கட்டை போட அதிகாரம் இல்லை என நான் கூறியது தீர்ப்பிலேயே வந்துள்ளது. அமைச்சரவை எடுத்த முடிவில் கை வைக்க அதிகாரம் இல்லை என நான் கூறியதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    கேபினட் முடிவு அனுப்பினால் அதில் கை வைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. டெல்லியில் நிலம் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம், நிதி ஆகியவற்றில் உரிமை இல்லை. ஆனால் புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருப்பதால், அனைத்து அதிகாரமும் சட்டசபைக்கு உண்டு.

    கோப்புகள் அனுப்பும் போது காரணங்கள் கூறி கோப்புகளை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியிருப்பது கவர்னருக்கு எந்த முடிவெடுக்கவும் தனி அதிகாரம் இல்லை.

    முழு அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே உண்டு. இது சம்பந்தமாக நான் தொடர்ந்து 2 ஆண்டுகளாக கவர்னர், பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதியும் எனக்கு சரியான பதில் கூறவில்லை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. மக்களுக்கு எங்களது அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள்.


    நாங்கள் நிறைவேற்றும் போது கோப்புகளை காலம் கடத்தி நிறைவேற்ற முடியாமல் தேவையில்லா காரணங்களை சொல்லி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்ள அதிகாரங்களை நியமிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தீர்ப்பு புதுவை மாநிலத்திற்கு பொருந்தும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர் அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு அதிகாரம் கிடையாது. தேவைப்பட்டால் கோப்பில் விளக்கம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரை அழைத்து பேசலாம். அவரும்கூட சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து பேச வேண்டும் என தெரிவித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

    அதிகாரிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த உத்தரவை நான் போட்டிருக்கிறேன். யார் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு போட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்.

    2 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள மரியாதையை குறைக்கும் வகையில் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக செயல்பட வைத்ததை இனி நிறுத்தி கொள்வார்கள் என நினைக்கிறேன். கவர்னரை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மக்களாட்சி தத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அமைச்சரவைக்கு உள்ள உரிமையில் அவர் தலையிட்டதால் தான் பிரச்சினை வந்தது. அதிகார போட்டி இதில் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #DelhiPowerTussle #PuducherryCM #Narayanasamy
    கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். #Kanimozhi #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் புதுவை கம்பன் கலையரங்கில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாற்று திறணாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் நியமன பதவிகளாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைகள் படி அவர்கள் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவை கவர்னர் கிரண்பேடியால் புதுவை மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா இந்து, இந்தி, இந்துஸ்தாகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நடந்தால் சிறு பான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோர் அடிமைகள் ஆக்கப்படுவார்கள்.


    எனவே மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும், நமது உரிமைகள் நிலைபெற மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும்.

    கருத்தரங்கில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. செயல் திட்டகுழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கருத்தரங்கை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். சென்னை-சேலம் பசுமை வழிசாலை திட்டத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு செயல்பட்டு வருகிறது என்றார். #Kanimozhi #GovernorKiranBedi

    விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கவர்னர் பல மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய சென்றபோது தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக கவர்னர் தனது பணியை யாராவது தடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்திய தண்டனை சட்டத்தின்படி கவர்னர் தனது அலுவலகத்தில் பணிபுரியும்போது குறுக்கீடு செய்யக்கூடாது. ஆனால், அவர் பல மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    கவர்னர், முதல்- அமைச்சர், அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும்போது விதிமுறைகளை மீறினாலும் அது தங்களுக்கு ஏற்புடையதில்லை என்ற போது போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக கவர்னர் விவரம் தெரியாமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே காப்பியடித்து புதுவை கவர்னரும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பணியை தடுத்தால் சிறை தண்டனை என கூறியுள்ளார்.

    தமிழகம், புதுவை என எந்த மாநிலமாக இருந்தாலும், அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர்கள் தலையிட முடியாது. கவர்னர்களோ, துணை நிலை ஆளுநர்களோ மாவட்டங்களுக்கு செல்வதில் தவறில்லை.

    ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் அவர்கள் எடுக்க முடியாது. அவர்கள் செல்லும் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் உரிமை இருக்கிறது.

    மக்களால் தேர்வு செய்த அரசுக்குத்தான் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவும், செயல்படுத்தவும் உரிமை உண்டு. இதை நிறைவேற்றும்போது கவர்னர், துணை நிலை ஆளுநர் என முட்டுக்கட்டை போடக்கூடாது.

    சமீபத்தில் கவர்னர் கிரண்பேடி பாகூர் சென்றார். அப்போது பொதுமக்கள் 11 முறை பாகூர் வந்துள்ளீர்கள்? இதனால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஆனால், அவர்களுக்கு கவர்னர் எந்த பதிலும் கூறாமல் வந்துவிட்டார். பொதுமக்கள் யாரிடமும் கேள்வி எழுப்ப உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்கள் இல்லாமல் அரசு அலுவல்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை.

    இதுதொடர்பாக பல முறை கவர்னருக்கு கடிதம் மூலமும், நேரிலும் தெரிவித்துள்ளேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் இதை புதுவை கவர்னர் தொடர்ந்து மீறி வருகிறார். அரசின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இது அரசியல் விதிகளுக்கு மீறானது.

    கவர்னராக பதவி வகிக்க கிரண்பேடிக்கு தகுதி இல்லை. அவர் தன்னார்வ தொண்டு நிறுவன தலைவராக இருக்கவே தகுதி உள்ளது. பிரதமர் மோடியிடம் கிரண்பேடியின் செயல்பாடு குறித்து 4 முறை புகார் தெரிவித்துள்ளேன்.

    மீண்டும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நேரம் ஒதுக்கினால் 5-வது முறையாக கிரண்பேடி மீது புகார் செய்வேன்.

    கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே வழக்கு தொடருவேன். ஏற்கனவே லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அறிவிக்கப்படாத எமர்ஜென்சியைத்தான் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்திரா காந்தி காலத்திலான எமர்ஜென்சியை விமர்சிக்க பாரதிய ஜனதாவுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். எனவே வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.



    இந்த நிலையில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவது தவறில்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறினார்.

    தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp

    ‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’ டெல்லியை போன்று போராட தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பேடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- டெல்லியில் கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி கவர்னர் மாளிகையிலேயே போராட்டம் நடத்தி வருகிறார். நீங்கள் கவர்னருக்கு எதிராக எப்போது போராட போகிறீர்கள்?

    பதில்:- நாங்கள் நாகரிகம் கருதி சட்டத்தின்படி செயல்படுகிறோம். அந்த நிலைக்கு செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு.

    கேள்வி:- புதுவை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துவிட்டதா?

    பதில்:- புதுவை பட்ஜெட் தொடர்பான கோப்பில் உள்துறை செயலாளர் கையெழுத்திட்டுவிட்டார். இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்குவார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டில் ஒரே மாதிரியான வழக்கில் 2 விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவைக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்பது போல் உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடக்கூடாது.

    டெல்லியில் கவர்னருக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டும், மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்கிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.

    சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவர் விதிமுறையை மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

    இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்துள்ளோம். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புதுவைக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதை சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவருவோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது-

    புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்பு துறையினரால் பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் 47 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனைகளை பெற்றுக்கொள்ள வசதியாக நில ஆர்ஜித சட்ட விதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையோடு 3 முறை திருத்தம் செய்துள்ளனர். ஆனால் இதற்கு மத்திய அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.

    குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த மனைகளை பெரும்பாலோனோர் அரசின் அனுமதி பெறாமலும், அரசிற்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகையை செலுத்தாமலும் விற்பனை செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் பலர் குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த வீட்டு மனைகளை விதிகளை முற்றிலும் மீறி அந்த வரைபடத்தின்படியும் அல்லாமல் 3 மீட்டர் அகலமுள்ள அரசு இடத்தினை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டி உள்ளனர்.

    அந்த மனையை பெற்ற 5 வருடத்திற்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் இல்லை என்றால் காலிமனை அரசால் கையகப்படுத்தப்படும் என விதி இருந்தும் இவர்கள் இன்றளவும் காலிமனையாகவே பலர் வைத்துள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக நகர அமைப்புத்துறை இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே இந்த மனைகளை நேரில் ஆய்வு செய்து விதிகள் மீறியுள்ள அனைத்து மனைகளின் உரிமையாளர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரகுபதி அந்த மனுவில் கூறியுள்ளார்.
    ×